இவங்க 2 பேர் எங்க டீம்ல இருக்கும் வரை எங்களை யாராலும் வீழ்த்த முடியாது – ரோஹித் சர்மா உற்சாகம்

Rohith
- Advertisement -

ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபயர் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது.

dcvsmi

- Advertisement -

அதிகபட்சமாக இஷான் கிஷன் 30 பந்துகளில் 55 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 38 பந்துகளில் 51 ரன்களையும் குவித்தனர். இறுதிநேரத்தில் களம் புகுந்த ஹர்டிக் பாண்டியா 14 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 37 ரன்களை குவித்து அசத்தினார். அதன் பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே அடித்தது.

இதனால் மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி சார்பாக பும்ரா சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 14 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டிரென்ட் போல்ட் இரண்டு ஓவர்கள் வீசி 9 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக பும்ரா தேர்வானார்.

pandya 1

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்ஸ்மேன்களை பெருமையாக பேசியது மட்டுமின்றி தங்களது அணியில் உள்ள பவுலர்களையும் பாராட்டினார். இதுகுறித்து அவர் பேசுகையில் : எங்கள் அணியில் பும்ரா. போல்ட் ஆகிய இருவரும் உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள். அவர்கள் இத்தொடர் முழுவதுமே தங்களது திடமான பவுலிங்கை வெளிப்படுத்தி வருகின்றனர்.

bumrah mi

பல்வேறு அணிகளுக்கு எதிராக பல்வேறு ஆட்டங்களில் விளையாடிய அவர்களால் சிறப்பாக திட்டமிட்டு பந்து வீச முடியும். அதனை இந்த போட்டியிலும் அவர்கள் நிரூபித்துள்ளார்கள். மேலும் அனைத்துப் போட்டிகளிலும் அவர்கள் வெவ்வேறு திட்டத்துடன் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்து வீசி வருகிறார்கள். அவர்களது திட்டங்களும், பந்துவீச்சும் நினைத்தது போன்றே செயல்படுத்தி வருகிறார்கள். அதுவும் எங்கள் அணிக்கு மிகப்பெரிய பலம் என்று ரோஹித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement