மைதானத்தின் இந்த தன்மையே எங்களின் இந்த வெற்றிக்கு காரணம் – ரோஹித் பெருமிதம்

Rohith-3
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் குவித்தது.

Dhawan

- Advertisement -

அதன் பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீரரான ரோகித் சர்மா மற்றும் தவான் சிறப்பான துவக்கத்தை அளித்து முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 43 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இந்திய அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 85 ரன்கள் குவித்து அதன் மூலம் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போட்டி முடிந்த பின்னர் வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது : இந்த போட்டியில் இரண்டு ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் சுந்தர் பொதுவாக புதிய பந்தில் சிறப்பாக வீசுவார். ஆனால் இந்த முறை மைதானம் பெரிதாக இருப்பதால் அவரின் பந்துவீச்சு நிலையை மாற்றி மிடில் ஓவர்களில் பந்துவீச செய்தேன். அவரும் சிறப்பாக செயல்பட்டார்.

Chahal

மேலும் இந்த போட்டியில் மைதானம் இரண்டாவது பேட்டிங் செய்யும்போது ஒத்துழைப்பு அளிக்கும் என்பதை நான் முன்கூட்டியே கணித்து பந்துவீச்சை தேர்வு செய்தேன். ஏனெனில் இரண்டாவது பேட்டிங்கின்போது டியூ இருப்பதனால் பந்து வீச்சாளர் கிரிப் செய்து பந்து வீச முடியாது எனவே அதனால் பேட்டிங் எளிதாக இருக்கும் என்று நினைத்தேன். அதன்படி என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்து நான் சிறப்பாக விளையாடினேன்.

Rohith 4

இந்த மைதானம் பேட்டிங்கிற்கு ஒத்துழைப்பு நன்றாகவே தந்தது. மேலும் பந்துவீச்சில் எந்த ஒரு ஸ்விங்கும் இல்லை பேட்டிங் செய்ய மிக எளிதாக இருந்தது. எனவே மைதானத்தின் இந்த தன்மையினால் இந்த போட்டியை இந்த போட்டியை தற்போது சிறப்பாக முடித்துள்ளோம் . இருப்பினும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருக்கிறது அதனை நாங்கள் மறக்க மாட்டோம் என்று ரோகித் சர்மா குறிப்பிட்டார்.

Advertisement