Rohith Sharma : தோனி மற்றும் ஜாதவை குறைகூற வேண்டாம் – ரோஹித் சர்மா

உலகக் கோப்பை தொடரின் 38வது போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து

Jadhav
- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் 38வது போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.

Ind vs Eng

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 337 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக பேர்ஸ்டோ 111 ரன்களை குவித்தார். பென் ஸ்டோக்ஸ் 79 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பிறகு 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 102 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்திய அணி இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியை இந்திய அணிக்கு இந்த தொடரின் முதல் தோல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Rohith

போட்டி முடிந்து பேசிய ரோஹித் தோல்வி குறித்து கூரியுதாவது : இந்த தோல்விக்கு அனைவருமே காரணம் தான். தோனி மற்றும் ஜாதவ் குறித்து அதிகமான விமர்சனங்கள் எழுகின்றன. ஆனால், தோனி மற்றும் ஜாதவ் ஆகியோர் அடித்து ஆட விரும்பினர். அவர்கள் பவுண்டரிகள் நோக்கத்தில் ஆடினாலும் மைதானம் மந்தமாக இருந்ததால் அவர்களது ஆட்டத்திற்கு அது ஒத்துழைக்கவில்லை.

Dhoni

மேலும் மைதானம் மந்தமாக இருப்பது புரிந்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அதனை தங்களுக்கு சாதகமாக்கி மெதுவாக பந்துகளை வீசினார்கள் என்று ரோஹித் கூறினார். இதே கருத்தினை தான் கோலியும் கூறி இருந்தார். ஆனால், இந்திய ரசிகர்கள் அவர்கள் அதிரடியாக ஆடவில்லை. 50 ஓவர்களை முடிக்க கடமைக்காக ஆடியதுபோல இருந்தது என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement