டஃக் அவுட்டில் அமர்ந்திருந்த சிராஜின் தலையின் ஓங்கி ஒரு அடிவிட்ட ரோஹித் சர்மா – நடந்தது என்ன?

Siraj-3
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று ஜெய்ப்பூரில் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக இளம் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் விளையாடினார். கடந்த 2018ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போதுதான் அவர் டி20 கிரிக்கெட்டில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடதக்கது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்த சிராஜிக்கு தற்போது டி20 கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இருப்பினும் நேற்றைய போட்டியில் அவர் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார். 4 ஓவர்கள் வீசிய அவர் 39 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

- Advertisement -

அதிலும் அவர் கடைசி ஓவர் வீசும்போது மிட்செல் சான்ட்னர் அடித்த பந்தை தடுக்க நினைத்து கையில் காயமடைந்து கொண்டார். பந்து பட்ட சில நொடிகளிலேயே ரத்தம் வந்தாலும் அதனை பொருட்படுத்தாது பேண்டேஜ் ஒட்டி அவர் தனது ஓவரை முடித்திருந்தார். இந்நிலையில் இந்திய அணி இரண்டாவதாக பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது டக் அவுட்டிலிருந்த கேப்டன் ரோகித் சர்மா சிராஜை தலையில் ஓங்கி பளார் என்று அடிப்பது போல ஒரு காட்சி தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் அதற்கு காரணம் என்ன என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. அதன்படி டக் அவுட்டில் அமர்ந்திருந்த ரோஹித், ராகுல், சிராஜ் ஆகிய மூவரும் எதையோ பார்த்துக் கொண்டிருக்க அதன் பின்னர் உடனடியாக ராகுல் மற்றும் ரோஹித் ஆகியோர் சிராஜை பார்க்கின்றனர். அப்போது ரோஹித் சிரித்தவாறு சிராஜை தலையில் ஓங்கி அடிக்கிறார். ஆனால் ரோகித் சர்மா அப்படி அடித்ததன் காரணம் என்ன என்று தெரியவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : டீம்ல இவரு வந்துட்டாரு இல்ல. இனிமே இந்திய அணி வரலாறு படைக்கும் – கவுதம் கம்பீர் அதிரடி

இருப்பினும் அவர் எளிதாக தடுக்க வேண்டிய பந்தினை தவற விட்டு கையில் அடிபட்டது தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பானதை பார்த்து இப்படி அடிபட்டு விட்டாயே என்று செல்லமாக ரோஹித் அடித்ததாகவும் தெரிகிறது. ரோகித் சிராஜின் தலையில் அடித்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement