போட்டிக்கு முன்பு தான் அவரிடம் பேசினேன் ஒரே ஆளாக எங்களுக்கு வெற்றியை தேடி தந்து விட்டார் – ரோஹித் புகழாரம்

Rohith
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 21 ஆவது போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை குவித்தது.

rrvsmi

- Advertisement -

மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் 47 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் என 79 ரன்கள் குவித்தார். கேப்டன் ரோஹித் சர்மா 35 ரன்களும், ஹார்டிக் பாண்டியா 30 ரன்களும் எடுத்து அசத்தினார். அதன் பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களை மட்டுமே அடித்தது.

இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக ஜாஸ் பட்லர் 44 பந்துகளை சந்தித்து 5 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரி என 70 ரன்களையும், ஜோப்ரா ஆர்ச்சர் 24 ரன்களும் குவித்தனர். அவர்களை தவிர மற்ற யாரும் 20 ரன்களை கூட அடிக்கவில்லை.

surya kumar

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். எங்களிடம் தரமான வீரர்கள் அவர்களது வேலையை தரமான செய்து முடித்துள்ளார்கள். அணியில் உள்ள அனைத்து வீரர்களும் தற்போது நம்பிக்கை பெற்று விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் திறமையான வீரர்கள் மற்ற வீரர்கள் சோபிக்காத பட்சத்தில் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு நன்றாக உதவியது.

Surya kumar 1

இந்த போட்டியில் பந்து வீச்சாளர்கள் சிறப்பான முறையில் பந்து வீசினர். மேலும் எங்களது பீல்டிங்கும் சிறப்பாக அமைந்தது. இந்த போட்டிக்கு முன்பாக நான் சூர்யகுமார் யாதவ்விடம் சில அறிவுரைகளை வழங்கி பேசிக்கொண்டிருந்தேன். அதனை உணர்ந்த சூர்யகுமார் யாதவ் இன்றைய போட்டியில் சரியான ஷாட்டுகளை சிறப்பாக விளையாடினார். மேலும் அவர் கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என்று நினைத்திருந்தோம். அதே போன்று அவரும் விளையாடினார் அதனால் அவரால் பல ஷாட்டுகளை அடிக்க முடிந்தது. மேலும் அவர் எங்களுக்கு வெற்றியைத் தேடித் தந்து விட்டார் என்று ரோஹித் புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement