Rohith Sharma : இந்த போட்டியை நான் சிறப்பாக ஆடியதற்கு இவர் மட்டுமே காரணம் – ரோஹித் சர்மா

ஐ.பி.எல் தொடரின் 56 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், தினேஷ் கார்த்திக்

Rohith
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 56 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது மும்பை அணி. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக உத்தப்பா 41 ரன்களும், லின் 40 ரன்களும் எடுத்தனர். மலிங்கா சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களுக்கு 35 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்பின் 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணி 16.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 134 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 55 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 46 ரன்களையும் குவித்தனர். ஹார்டிக் பாண்டியா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ரோஹித் சர்மா கூறியதாவது : இந்த போட்டியில் நாங்கள் பெற்ற வெற்றி ஒருசிறப்பான வெற்றியாகும். ஒரு சிலரால் போட்டியை வெல்வது என்பதை நாங்கள் விரும்பவில்லை. மும்பை அணியில் இதுவரை அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆடிவருகின்றனர். மேலும், தொடரின் இரண்டாம் பாதியில் மும்பை அணி இதுவரை சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறது.

Rohith

எனது ஆட்டத்தை பார்க்க என் மகள் ஒவ்வொரு போட்டியின்போதும் வருகிறாள். ஆனால், அப்போதெல்லாம் நான் ரன்களை குவிக்கவில்லை. இந்த போட்டியில் நான் ரன்களை சேகரித்தேன் ஆனால், அதனை என் மகள் பார்க்காமல் தூங்கிவிட்டாள். எனது குழந்தைக்காக இந்த வெற்றியும் மற்றும் எனது ஆட்டத்தையும் சமர்ப்பிக்கிறேன் என்று கூறினார்.

Advertisement