நாங்க வேற மாதிரி டீம். எங்களால இறுதிநேரத்தில் கூட இந்த மாற்றத்தை கொடுக்க முடியும் – ரோஹித் சர்மா பேட்டி

Rohith
- Advertisement -

ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபயர் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது.

dcvsmi

- Advertisement -

அதிகபட்சமாக இஷான் கிஷன் 30 பந்துகளில் 55 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 38 பந்துகளில் 51 ரன்களையும் குவித்தனர். இறுதிநேரத்தில் களம் புகுந்த ஹர்டிக் பாண்டியா 14 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 37 ரன்களை குவித்து அசத்தினார். அதன் பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே அடித்தது.

இதனால் மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி சார்பாக பும்ரா சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 14 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டிரென்ட் போல்ட் இரண்டு ஓவர்கள் வீசி 9 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக பும்ரா தேர்வானார்.

pandya 1

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : இந்த தொடரில் எங்களது சிறந்த போட்டியாக இதை நான் கருதுகிறேன். டிகாக் மற்றும் சூர்யகுமார் யாதவ் விளையாடிய விதம் எங்களுக்கு ஒரு மொமன்டத்தை கொடுத்தது. நான் விரைவிலேயே அவுட்டாகி வெளியேறினாலும் அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். அதுவே எங்களுக்கு சரியான முடிவை கொடுத்தது.

- Advertisement -

இந்த அளவு இலக்கு வரும் என்று நாங்கள் நினைக்கவில்லை. நாங்கள் வேறு மாதிரி அணி வேறு மாறி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். பவர் பிளே ஓவர்களில் நிறைய ரன்களை குவிக்க நினைத்தோம். அதேபோன்று இறுதியிலும் எங்களால் அதிரடியை கொடுக்க முடியும் எங்களது பேட்டிங் பாசிட்டிவாக அமைந்தது. அதுமட்டுமின்றி பவுலர்களும் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்.

boult

எங்களது அணி ஒரு முற்றிலும் வேறு மாதிரியான அணி. எங்களால் பேட்டிங் ஆர்டரையும், பவுலிங் ஆர்டரையும் மாற்ற முடியும். அதனாலேயே எங்களுக்கு வெற்றி கிடைத்து வருகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் நாங்கள் இந்த ஆட்டத்துக்கு திரும்பி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என்று ரோஹித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement