எங்கள் அணியின் இளம்வீரரான இவர் சிறப்பான பார்மில் உள்ளார் – ரோஹித் சர்மா புகழாரம்

Rohith
- Advertisement -

ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபயர் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது.

dcvsmi

- Advertisement -

அதிகபட்சமாக இஷான் கிஷன் 30 பந்துகளில் 55 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 38 பந்துகளில் 51 ரன்களையும் குவித்தனர். இறுதிநேரத்தில் களம் புகுந்த ஹர்டிக் பாண்டியா 14 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 37 ரன்களை குவித்து அசத்தினார். அதன் பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே அடித்தது.

இதனால் மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி சார்பாக பும்ரா சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 14 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டிரென்ட் போல்ட் இரண்டு ஓவர்கள் வீசி 9 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகனாக பும்ரா தேர்வானார்.

pandya 1

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ரோகித் சர்மா இளம் வீரர் இஷான் கிஷன் பற்றி சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இஷான் கிஷன் இந்த தொடர் முழுவதும் சிறந்த பார்மில் உள்ளார். எனவே அவரை நாங்கள் பாசிட்டிவான வகையில் இரண்டாவது டைம் அவுட்டின் போது விளையாட கூறினோம். அவரும் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கினார்.

Ishan kishan

அதேபோன்று ஹர்திக் பாண்டியா வைத்து முன்னர் க்ருனால் பாண்டியாவை இறக்கும் போதும் அவரை அடித்து விளையாடும் படி கூறினோம். அந்த வகையில் எங்களது பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். மேலும் இந்த தொடர் முழுவதுமே இஷான் கிஷன் தனது சிறப்பான ஆட்டத்தை எங்களுக்கு அளித்து வருகிறார். அவரின் ஆட்டம் எங்கள் அணிக்கு முற்றிலும் பாசிட்டிவான விடயமாக நாங்கள் கருதுகிறோம் என ரோஹித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement