இந்த ஆண்டு நான் இந்த இடத்தில் தான் களமிறங்குவேன் – ரோஹித் திட்டவட்டம்

Rohith
- Advertisement -

இந்த ஆண்டு 12ஆவது ஐ.பி.எல் தொடர் வரும் சனிக்கிழமை 23ஆம் தேதி துவங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதவுள்ளன. இந்த போட்டிக்கான விறுவிறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

rohith1

- Advertisement -

இந்நிலையில் அனைத்து அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மும்பையில் நடந்த பயிற்சிக்கு பிறகு நடந்த பேட்டியில் பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது :

சென்ற ஆண்டு நான் மும்பை அணிக்காக 4ஆவது இடத்திலேயே அதிகம் ஆடி வந்தேன். அணியின் நலனுக்காகவும், ஆரோக்கியமான துவக்க ஜோடி இருந்ததாலும் நான் சென்ற ஆண்டு 4 ஆவது இடத்தில களமிறங்கி ஆடினேன். அந்த இடத்தில ஆடினாலும் என்னால் அணிக்கு தேவையான கணிசமான ரன்களை குவிக்க முடிந்தது. அனால், இந்த ஐ.பி.எல் தொடருக்கு நான் வேறு ஒரு முடிவினை எடுத்துள்ளேன்.

rohit 2

அதன்படி நான் வரவிருக்கும் உலகக்கோப்பை தொடரில் துவக்க ஆட்டக்காரராக இந்திய அணிக்காக ஆடப்போவதால் நான் வரும் ஐ.பி.எல் தொடரிலும் துவக்க ஆட்டக்காரராகவே ஆடப்போகிறேன். எனது இந்த முடிவு நிச்சயம் உலகக்கோப்பை தொடருக்கு உதவும் என்றே இந்த முடிவை தான் எடுத்ததாக ரோஹித் சர்மா தெரிவித்தார்.

Advertisement