இந்திய அணியில் இடம் பிடிக்கணுமா? அப்போ மொதல்ல இதை பண்ணுங்க – இளம் வீரர்களுக்கு ரோஹித் அட்வைஸ்

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நிறைவடைந்ததை அடுத்து இந்திய அணியானது அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியில் இருந்து பல முக்கிய வீரர்கள் ஓய்வு காரணமாகவும், காயம் காரணமாகவும் வெளியேறிய உள்ளதால் பல வீரர்களுக்கு மீண்டும் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

INDvsSL

- Advertisement -

இதன் காரணமாக இளம் வீரர்களின் செயல்பாடு எவ்வாறு இந்த தொடரில் அமையப் போகிறது என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் விளையாடி வரும் இளம் வீரர்களுக்கு அணியில் இடம்பிடிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்கள் சந்திப்பில் சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இளம் வீரர்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்று நினைத்தால் உள்ளூர் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும். தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் ரன்களை குவிக்கும் பட்சத்தில் மற்ற வீரர்களை போலவே இந்திய அணியில் உங்களுக்கும் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

indvswi

தற்போது நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரே ஒரு விடயம் மட்டும் தான். எதைப்பற்றியும் கவலைப்படாமல் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ரன்களை குவிக்க வேண்டும். அப்படி நீங்கள் தொடர்ச்சியாக ரன் குவிக்கும் பட்சத்தில் உங்களை தேடி வாய்ப்பு வரும் அதோடு இந்திய அணிக்காக விளையாடும் ஒவ்வொரு வீரரும் எதிரணி மற்றும் மைதானம் ஆகியவற்றை கணக்கில் கொண்டுதான் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

- Advertisement -

இதன் காரணமாக தொடர்ச்சியாக நீங்கள் உள்ளூர் தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அணிக்கு தகுதியானவராக இருந்தால் கட்டாயம் நீங்கள் தேர்வு செய்யப் படுவீர்கள் இதனை கவனத்தில் கொண்டு விளையாட வேண்டும் என்று ரோகித் சர்மா உள்ளூர் வீரர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது குறிப்பிட தக்கது.

இதையும் படிங்க : என்னோட புகைப்படத்தை வச்சி தப்பு பண்றாங்க. யாரும் சிக்காதீங்க ப்ளீஸ் – சச்சின் வருத்தம்

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி இன்று லக்னோ மைதானத்தில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement