எங்க அணியில் இவர் இருக்கும் வரை டார்கெட் எவ்ளோ இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்ல – ரோஹித் ஓபன் டாக்

Rohith
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 10 ஆவது லீக் போட்டியில் நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் அடித்தது.

abd

- Advertisement -

துவக்க வீரர்கள் படிக்கல் 54 ரன்களும், பின்ச் 52 ரன்களும் அடித்து சிறப்பான துவக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த கோலி 3 ரன்களுக்கு ஆட்டம் இருந்தாலும் டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடி 55 ரன்களும், துபே 27 ரன்கள் அடித்து அணி அணியின் ரன் குவிப்புக்கு உதவினர். அதனைத்தொடர்ந்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி துவக்கத்தில் ரோகித் சர்மா 8 ரன்கள், டிகாக் 14 ரன்கள், சூர்யகுமார் யாதவ் டக் அவுட் என 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது.

ஆனால் பின்னால் நங்கூரம் பாச்சிய இஷான் கிஷன் மற்றும் பொல்லார்ட் ஜோடி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்ற கட்டத்திலிருந்து போட்டியை சிறப்பாக இறுதிவரை கொண்டுசென்றனர். 5 ஓவருக்கு 90 ரன்கள் தேவை என்ற நிலையிலிருந்து போட்டியை “டை” ஆக்கினார்கள். இஷன் கிஷன் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். பொல்லார்ட் 60 ரன்கள் அடித்து இறுதிவரை களத்தில் இருந்தார். இரு அணிகளும் 201 ரன்களை குவித்தது போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் கூறியதாவது : இந்த போட்டி ஒரு சிறந்த போட்டியாக அமைந்தது. பேட்டிங் செய்ய ஆரம்பித்ததில் இருந்தே போட்டி எங்களது கட்டுப்பாட்டில் இல்லை. இஷான் கிஷன் மற்றும் பொல்லார்ட் ஆகியோர் வழக்கம்போல் மும்பை அணிக்காக தங்களது சிறப்பான இன்னிங்சை விளையாடினார்கள். ஆனால் எங்களது தொடக்கம் சரியாக அமையவில்லை. 200 ரன்கள் போன்ற இலக்கினை சேஸிங் செய்யும் பொழுது துவக்க ஓவர்களில் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும்.

Pollard 1

ஆனால் நாங்கள் பவர் பிளே 6-7 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து விட்டோம். அதுவே எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் 200 ரன்களை விரட்டக் கூடிய அளவிற்கு எங்களிடம் பேட்டிங் பவர் இருக்கிறது. எங்கள் அணியில் பொல்லார்ட் இருக்கும்வரை எவ்ளோ பெரிய இலக்கு இருந்தாலும் அது எட்டக்கூடிய இலக்கு தான். பொல்லார்ட் இதேபோன்ற சிறப்பான அதிரடியை தொடர்ந்து மும்பை அணிக்காக வழங்கி வருகிறார் என்று பொல்லார்ட் குறித்து புகழ்ந்து பேசினார் ரோஹித் சர்மா.

Advertisement