அவரை நான் அவுட்டாக்கி இருக்கக்கூடாது. அவருக்காக எனது விக்கெட்டை தியாகம் செய்து இருக்க வேண்டும் – ரோகித் சர்மா உருக்கம்

sky
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் குவித்தது.

MIvsDC

- Advertisement -

அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 50 பந்துகளில் 65 ரன்களும், பண்ட் 38 பந்துகளில் 56 ரன்கள் குவித்தனர். அவர்களை தவிர மற்ற யாரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. மும்பை அணி சார்பாக டிரென்ட் போல்ட் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 30 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், குல்டர்நைல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதன்பின்னர் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி டெல்லி அணியின் பந்துவீச்சை அனாயசமாக எதிர்கொண்டது. இறுதியில் 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரரான ரோகித் சர்மா 51 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இறுதியில் இஷான் கிஷன் 19 பந்துகளில் 33 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக டிரென்ட் போல்ட் தேர்வானார்.

Ishan kishan

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ரோகித் சர்மா பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது இப்போட்டியில் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றையும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதன்படி ரோஹித் குறிப்பிட்டதாவது : சூர்யகுமார் யாதவ் இந்த தொடர் முழுவதுமே சிறப்பான விளையாடி வருகிறார். அவர் இப்போது இருக்கும் பேட்டிங் பார்மில் அவரை நான் பேட்டிங் செய்ய விட்டிருக்க வேண்டும்.

ஆனால் அவர் எனக்காக ரன் அவுட்டாகி வெளியேறிச் சென்றார். நிச்சயம் அவருக்காக நான் எனது விக்கெட்டை தியாகம் செய்து இருக்க வேண்டும் என இப்போது நினைக்கிறேன் என போட்டி முடிந்து ரோகித் உருக்கமாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement