99 அடித்த இஷான் கிஷன் சூப்பர் ஓவரில் விளையாடாததற்கு இதுவே காரணம் – ரோஹித் கொடுத்த விளக்கம்

Kishan-2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 10 ஆவது லீக் போட்டியில் நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் அடித்தது.

kohli

- Advertisement -

துவக்க வீரர்கள் படிக்கல் 54 ரன்களும், பின்ச் 52 ரன்களும் அடித்து சிறப்பான துவக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த கோலி 3 ரன்களுக்கு ஆட்டம் இருந்தாலும் டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடி 55 ரன்களும், துபே 27 ரன்கள் அடித்து அணி அணியின் ரன் குவிப்புக்கு உதவினர். அதனைத்தொடர்ந்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி துவக்கத்தில் ரோகித் சர்மா 8 ரன்கள், டிகாக் 14 ரன்கள், சூர்யகுமார் யாதவ் டக் அவுட் என 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது.

ஆனால் பின்னால் நங்கூரம் பாச்சிய இஷான் கிஷன் மற்றும் பொல்லார்ட் ஜோடி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்ற கட்டத்திலிருந்து போட்டியை சிறப்பாக இறுதிவரை கொண்டுசென்றனர். 5 ஓவருக்கு 90 ரன்கள் தேவை என்ற நிலையிலிருந்து போட்டியை “டை” ஆக்கினார்கள். இஷன் கிஷன் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். பொல்லார்ட் 60 ரன்கள் அடித்து இறுதிவரை களத்தில் இருந்தார். இரு அணிகளும் 201 ரன்களை குவித்தது போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.

இந்நிலையில் நேற்றைய போட்டியின் ஆரம்பத்திலேயே மும்பை அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழ இளம் வீரரான இஷான் கிஷன் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மும்பை அணியை போட்டியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார் என்று கூறலாம். 58 பந்துகளைச் சந்தித்த அவர் 9 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரி என 99 ரன்கள் எடுத்து கடைசி ஓவரின் 5வது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

வெற்றிக்காக கடுமையாக போராடிய இவரது சிறப்பான ஆட்டம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. மேலும் சூப்பர் டச்சில் இருந்த பொல்லார்ட் மற்றும் இஷான் கிஷன் ஆகியவர்களே சூப்பர் ஓவரில் இறங்குவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இஷான் கிஷானுக்கு பதிலாக பாண்டியா பொல்லார்ட்டுடன் களமிறங்கினார்.

ishan kishan

இதனால் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷனை ஏன் இறக்கவில்லை என்று கேள்வி எழும்பியது. இந்நிலையில் இந்த கேள்விக்கு பரிசளிப்பு விழாவின் போது பதிலளித்த ரோஹித் கூறியதாவது : இஷான் கிஷன் இந்த போட்டியை முழுவதுமாக விளையாடி உள்ளதால் அவர் புத்துணர்ச்சியுடன் இல்லை. சற்று டயர்டு ஆக அவர் இருந்ததால் அவர் களமிறங்கவில்லை என்று ரோஹித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement