Rohith Sharma : தோனியை தடுக்க புதிய திட்டம் வகுத்துள்ள ரோஹித் சர்மா – விவரம் இதோ

ஐபிஎல் தொடர் இன்றோடு முடிவுக்கு வருகிறது. கடந்த 45 நாட்களுக்கும் மேலாக ரசிகர்களை குதூகல படுத்தி வந்த ஐபிஎல் தொடர் நாளை இறுதிப் போட்டியை எட்ட உள்ளது. இன்று நடைபெற உள்ள

Dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடர் இன்றோடு முடிவுக்கு வருகிறது. கடந்த 45 நாட்களுக்கும் மேலாக ரசிகர்களை குதூகல படுத்தி வந்த ஐபிஎல் தொடர் இன்று இறுதிப் போட்டியை எட்ட உள்ளது. இன்று நடைபெற உள்ள போட்டியோடு இந்த வருட ஐபிஎல் தொடர் முடிவடைய உள்ளதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

Bravo

- Advertisement -

இந்த இறுதிப் போட்டியில் சென்னை அணியும் மும்பை அணியும் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் தலா மூன்று முறை ஐபிஎல் தொடரை வென்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில் நாளை வெற்றி பெறும் அணி சரித்திரம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தோனியை கட்டுப்படுத்த புதிய யுக்தியை கையால உள்ளார்.

இன்று நடக்க உள்ள போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனியே சென்னை அணிக்கு முக்கிய வீரராக திகழ்வார் என்று நம்பப்படுகிறது. இந்த தொடரிலும் தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் தோனியை தடுத்தால் மும்பை அணி பாதி வெற்றி பெற்று விடும். எனவே இன்றைய போட்டியில் டோனிக்கு எதிராக பும்ரா மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோரை பயன்படுத்த உள்ளார் ரோஹித்.

Dhoni

இந்த தொடரில் இதுவரை சென்னை அணி மும்பை அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. அந்த இரண்டு போட்டிகளிலும் பும்ரா மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோரது பந்து வீச்சில் திணறியது குறிப்பிடதக்கது. இதனால் இன்றைய போட்டியில் தோனி களம் இறங்கும் போது இவர்கள் இருவரையும் டோனிக்கு எதிராக பந்து வீச வைக்க ரோகித் திட்டம் வைத்துள்ளார். இந்த திட்டம் எவ்வளவு தூரம் உபயோகமாகும் என்று இன்றைய போட்டியில் தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement