Rohith Sharma : நேற்றைய போட்டியில் ரோஹித் விளையாடாததன் காரணம் இதுதானாம் – அதிகாரபூர்வ அறிவிப்பு

நேற்றைய மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரோஹித் சர்மா விளையாடவில்லை. அவருக்கு பதிலாக டி20 போட்டிகளில் பல்வேறு நாடுகளில் விளையாடி மிகுந்த அனுபவம் வாய்ந்த பொல்லார்ட் மும்பை அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். ரோஹித்துக்கு பதிலாக

Rohith-1
- Advertisement -

நேற்றைய மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரோஹித் சர்மா விளையாடவில்லை. அவருக்கு பதிலாக டி20 போட்டிகளில் பல்வேறு நாடுகளில் விளையாடி மிகுந்த அனுபவம் வாய்ந்த பொல்லார்ட் மும்பை அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். ரோஹித்துக்கு பதிலாக மும்பை அணியின் இளம் வீரர் சித்தேஷ் லாட் அணியில் இடம்பிடித்தார். இந்நிலையில் ரோஹித் விளையாடாததன் காரணத்தினை மும்பை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Rohith

- Advertisement -

அதன்படி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்காக ஈடுபட்டிருந்த ரோஹித் வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்ட காரணத்தினால் அணியில் ஆடவில்லை. காயம் சிறியதாக இருந்தாலும் வரப்போகும் 50 ஓவர் உலகக்கோப்பையில் ரோஹித் பங்கேற்க வேண்டும் என்பதால் அவரின் உடல்நிலையே முக்கியம் அதில் எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக ரோஹித்துக்கு இந்த போட்டியில் ஓய்வளித்ததாக மும்பை அணி நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் தொடரின் 24 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

Pollard

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக ராகுல் சதமடித்து 100 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

Rahul 1

பின்னர் 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய மும்பை அணி துவக்கத்தில் விக்கெட்டுகளை தவித்தது. பிறகு இறங்கிய மும்பை அணியின் தற்காலிக கேப்டன் பொல்லார்ட் சிறப்பாக விளையாடி 31 பந்துகளில் 83 ரன்களை குவித்து ஆட்டம் இழந்தார். இதில் 10 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும்.

Pollard (1)

ஒரு கட்டத்தில் மும்பை அணி எளிதாக தோற்றுவிடும் என்ற நிலையில் இருந்து பொல்லார்ட்டின் நம்பமுடியாத சிறப்பான பேட்டிங்கால் பஞ்சாப் அணியை திணறவைத்தார். சந்திக்கும் பந்துகளை எல்லாம் பவுண்டரிக்கு பறக்கவிட்டு மும்பை அணியை வெற்றபெற வைத்தார். முடிவில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொல்லார்ட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்க பட்டார்.

Advertisement