இலங்கை அணிக்கெதிரான முதலாவது போட்டியில் ஏன் ருதுராஜ் கெய்க்வாட் ஆடல தெரியுமா? – ரோஹித் விளக்கம்

Ruturaj
- Advertisement -

இந்திய அணியின் இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரில் கடந்த 2020-ஆம் ஆண்டு சென்னை அணிக்காக அறிமுகம் ஆனதில் இருந்து சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய அவர் விரைவில் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படுவார் என்று அனைவரும் பேசி வந்த வேளையில் இலங்கை அணிக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற சுற்றுப்பயணத்தில் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமானார்.

Ruturaj

- Advertisement -

அந்த தொடரில் இரண்டு ஆட்டங்களில் பங்கேற்ற அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 3-வது டி0 போட்டியில் விளையாடினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் மிக சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

இதுவரை இந்திய அணிக்காக 3 போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடி உள்ளதால் தொடர்ச்சியாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார் போலவே இலங்கை அணிக்கு எதிரான இந்த டி20 தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்த ருதுராஜ் கெய்க்வாட் நிச்சயம் இன்று துவங்கிய இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ruturaj

ஆனால் இன்றைய போட்டியில் அவர் விளையாடாதது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் ஏன் ஆடவில்லை என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாசின் போதே தெளிவான விளக்கத்தை கொடுத்து இருந்தார். அதன்படி ரோகித் கூறுகையில் : ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய போட்டியில் விளையாடவில்லை.

- Advertisement -

ஏனெனில் அவருக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளதால் அதன் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடும் அளவிற்கு அவர் உடல் தகுதியுடன் இல்லை. எனவே இந்த ஒரு போட்டியை அவர் தவற விடுகிறார் என்று ரோகித் சர்மா குறிப்பிட்டார். இதன் காரணமாக அவர் இலங்கை அணிக்கு எதிரான அடுத்து வரும் இரண்டு போட்டிகளில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : INDvsSL முதல் டி20 : டாஸிற்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா – பேசியது என்ன?

சென்னை அணிக்காக அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் நிச்சயம் சர்வதேச கிரிக்கெட்டிலும் தடம் படிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் வேளையில் தொடர்ச்சியாக அவர் அடுத்தடுத்து சிக்கலை சந்தித்து வருவது ஒரு வருத்தத்திற்குரிய விடயம் தான். இதன் காரணமாக மீண்டும் இன்றைய போட்டியிலும் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோரது ஜோடியே துவக்க வீரர்களாக களம் இறங்கி விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement