ரோஹித் சர்மா அடித்த சிக்ஸரால் பெங்களூரு ரசிகருக்கு ஏற்பட்ட பரிதாபம் – வெளியான மருத்துவ அறிக்கை

Rohit-six
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியானது தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த 12 ஆம் தேதி பெங்களூரு மைதானத்தில் பகலிரவு போட்டியாக துவங்கிய இந்த கடைசி டெஸ்ட் போட்டியானது இரண்டாம் நாள் முடிவிலேயே கிட்டத்தட்ட போட்டி முடியும் நிலைக்கு வந்து விட்டது என்றே கூறலாம். ஏனெனில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 252 ரன்களும், இலங்கை அணி 109 ரன்கள் மட்டுமே குவித்தன.

INDvsSL cup

- Advertisement -

பின்னர் 143 ரன்கள் முன்னிலை என்ற நிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது 303 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் காரணமாக இலங்கை அணிக்கு 447 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி தங்களது இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டை இழந்து 28 ரன்கள் குவித்து தடுமாறி வருகிறது.

இதன் காரணமாக அவர்களின் வெற்றிக்கு 419 ரன்கள் தேவைப்படுவதால் தற்போதே இந்திய அணியின் வெற்றி உறுதி என்று கூறலாம். போட்டியின் மூன்றாம் நாளான இன்று விரைவில் இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அடித்த சிக்ஸரால் ரசிகர் ஒருவருக்கு ஏற்பட்ட காயம் குறித்து தகவல் வெளியாகி தற்போது இணையத்தில் அதிகளவு வைரலாக பரவி வருகிறது.

rohit six 1

அதன்படி சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு முழு அனுமதி வழங்கப்பட்டது. இதன் காரணமாக 22,000 ரசிகர்கள் நேரில் இந்த போட்டியை கண்டுகளித்து வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் பெங்களூரைச் சேர்ந்த 22 வயது ரசிகர் ஒருவர் டி கார்ப்பரேட் பாக்ஸ் என்கிற பிரிவில் அமர்ந்து போட்டியை ரசித்து கொண்டிருந்தார். அப்போது இலங்கை வீரர் பெர்னாண்டோ வீசிய பந்தில் ரோகித் சர்மா அடித்த சிக்ஸர் ஒன்று ரசிகர்கள் மத்தியில் இருந்த அந்த குறிப்பிட்ட நபரின் மூக்கு பகுதியில் பட்டுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக அவருக்கு ரத்தம் கசிய உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்று அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கையில் அவருக்கு மூக்கில் உள்ள எலும்பில் சற்று முறிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவருக்கு ரத்தம் வந்ததால் அவருக்கு தற்போது சில தையல்களும் போடப்பட்டுள்ளதாக ஹோஸ்மாட் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் அஜித் பெனடிக் ரயான் அந்த ரசிகரின் காயம் குறித்து தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றில் அதிக ப்ளே ஆஃப் போட்டிகளில் விளையாடிய டாப் அணிகளின் பட்டியல் – டாப் 3 அணிகள் இதோ

பொதுவாகவே இதேபோன்று கிரிக்கெட் வீரர்கள் அடிக்கும் பந்து ரசிகர்கள் மத்தியில் சிறிய காயத்தை ஏற்படுத்துவது புதிதல்ல. இருப்பினும் தற்போது ரோஹித் அடித்த சிக்ஸரால் ரசிகருக்கு போடப்பட்ட தையல் குறித்த இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement