சக வீரர்களை களத்தில் வைத்து மோசமாக திட்டிய ரோஹித் சர்மா.. ஸ்டம்ப் மைக்கில் பதிவான வார்த்தை

Rohit
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது தற்போது அதற்கு பழிதீர்க்கும் விதமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பலமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 2-ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 396 ரன்களை குவித்தது. அதனை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் விளையாடிய இங்கிலாந்து அணி அவர்களது முதல் இன்னிங்சில் 253 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

பின்னர் தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்டம் நேர முடிவில் 28 ரன்களை குவித்துள்ளது. இதன் காரணமாக 171 ரன்கள் என்கிற முன்னிலையுடன் இந்திய அணி மிகப்பலமான நிலையில் உள்ளது.

இந்நிலையில் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சகவீரர்களை மோசமாக திட்டிய ஒரு ஆடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கண்டனத்தை பெற்று வருகிறது. ஏற்கனவே இப்படி களத்தில் கோபத்தை ரோகித் சர்மா வெளிப்படுத்தி பலமுறை நாம் பார்த்ததுண்டு.

- Advertisement -

அந்த வகையில் இன்றைய போட்டியின் போது 31-வது ஓவருக்கு பிறகு அடுத்த ஓவர் வீசுவதற்கு முன்னதாக வீரர்களை பீல்டிங் செட் செய்து கொண்டிருந்த ரோகித் சர்மா சக வீரர்கள் சிலரை நோக்கி தோட்டத்தில் நடந்து செல்வது போன்று போகாதீர்கள்.. வேகமாக செல்லுங்கள்.. என்று கூறி தாயை பழிக்கும் ஒரு வார்த்தை ஹிந்தியில் உபயோகித்து திட்டினார்.

இதையும் படிங்க : ஆப்கானிஸ்தான் அணியில் நடந்த அதிசய நிகழ்வு.. தனது மாமாவுக்கு முக்கிய கௌரவத்தை கொடுத்த மருமகன்

அவர் இப்படி சத்தமாக திட்டிய ஆடியோ ஸ்டம்ப் மைக் மூலம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது. பல கோடி பேர் பார்க்கும் ஒரு போட்டியில் இப்படி அணியின் கேப்டனாக இருந்து கெட்ட வார்த்தையை பயன்படுத்தலாமா? என்று ரசிகர்கள் ரோகித் சர்மாவுக்கு எதிராக தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement