IND vs AUS :ஆஸி அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார். ஏன் தெரியுமா? – வெளியான அறிவிப்பு

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனை அடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

அதனை தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் வீரர்களின் பட்டியலையும் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார் என்றும் அந்த போட்டியில் மட்டும் ஹார்டிக் பாண்டியா கேப்டனாக செயல்படுவார் என்று பி.சி.சி.ஐ உறுதி செய்துள்ளது.

மேலும் அதற்கான காரணத்தையும் பி.சி.சி.ஐ தங்களது டிவிட்டர் பக்கத்தில் தெளிவாக பதிவிட்டுள்ளது. அதன்படி அவர்கள் வெளியிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : ரோகித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் குடும்ப கமிட்மென்ட்ஸ் காரணமாக விளையாட மாட்டார் என்று பகிராப்ட்டுள்ளது.

- Advertisement -

மேலும் எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா விளையாடுவார் என்றும் உறுதி செய்துள்ளது. எனவே ரோஹித் சர்மா தவறவிட இருக்கும் இந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஹார்டிக் பாண்டியா செயல்படுவார் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : IND vs AUS : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – லிஸ்ட் இதோ

ஏற்கனவே டி20 அணிக்கு ஹார்டிக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டு வரும் வேளையில் இனி ரோகித் சர்மாவுக்கு அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஹார்டிக் பாண்டியா தான் கேப்டன் என்பது இந்த பதிவின் மூலம் உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement