இப்படி 2 நாளில் நாங்க பெற்ற அசத்தலான வெற்றிக்கு இவர்களே காரணம்.. தொடரை சமன் செய்த பிறகு – ரோஹித் சர்மா மகிழ்ச்சி

Rohit-Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்று ஜனவரி 3-ஆம் தேதி கேப்டவுன் நகரில் துவங்கிய வேளையில் போட்டியின் இரண்டாம் நாளான இன்று இந்த டெஸ்ட் போட்டி முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்தது.

அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியின் முதலாவது இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி 55 ரன்கள் மட்டுமே குவிக்க இந்திய அணியானது 153 ரன்கள் குவித்தது. பின்னர் 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய தென்னாப்பிரிக்கா அணி 176 ரன்கள் குவித்ததால் இந்திய அணி 79 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது.

- Advertisement -

அதன்படி இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 3 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் குவிக்கவே இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : செஞ்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் செய்த தவறை நாங்கள் புரிந்துகொண்டு அதிலிருந்து சில பாடங்களை கற்றுக்கொண்டு தற்போது மிகச் சிறப்பாக மீண்டும் வந்துள்ளோம்.

அதிலும் குறிப்பாக எங்களது அணியின் பவுலர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினர். இந்த மைதானத்தில் எங்களது பந்துவீச்சாளர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். அதோடு கூடுதலாக நாங்கள் முதல் இன்னிங்சில் 100 ரன்கள் வரை முன்னிலை பெற்றது மகிழ்ச்சி. ஆனாலும் கடைசி 6 விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. இது போன்ற குறுகிய போட்டிகளில் இப்படித்தான் நடக்கும் இருந்தாலும் அனைவருமே சிறப்பாக செயல்பட்டனர்.

- Advertisement -

சிராஜ் இந்த போட்டியில் அற்புதமாக பந்து வீசினார். அவர் இதேபோன்று எப்பொழுதுமே ஒரு மிகச் சிறப்பான ஸ்பெல்லை எங்களுக்காக வழங்கி வருகிறார். இந்த போட்டியின் வெற்றிக்கு எங்களது அணியின் வேகப்பந்து வீச்சார்களான சிராஜ், பும்ரா, முகேஷ் குமார் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சே காரணம். ஆசிய கண்டத்திற்கு வெளியே நாங்கள் பல போட்டிகளில் விளையாடியுள்ளோம். அதில் நமது அணி சிறப்பாகவும் செயல்பட்டுள்ளது.

இதையும் படிங்க : போன மேட்ச்ல ரன்ஸ் வழங்கினாலும்.. இப்போ கம்பேக் கொடுக்க அதை செஞ்சேன்.. ஆட்டநாயகன் சிராஜ் பேட்டி

இந்த தென்னாப்பிரிக்க தொடரிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்த தொடரை நம்மால் கைப்பற்ற முடியவில்லை என்றாலும் சமனில் முடித்ததை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. தென்னாபிரிக்க அணி ஒரு பலமான அணி எப்போதுமே நமக்கு அவர்கள் சவால் அளிக்கும் வகையில் விளையாடி வருகிறார்கள். இந்த தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடியதாக ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement