4 ஆவது டெஸ்ட் போட்டியில் நாங்க ஜெயிச்சதுக்கு காரணமே இவர்தான்.. இளம்வீரரை பாராட்டி – ரோஹித் சர்மா பேட்டி

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது இன்று நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த இரண்டாவது இன்னிங்ஸில் சுப்மன் கில் ஆட்டம் இழக்காமல் 52 ரன்களையும், துருவ் ஜுரேல் 39 ரன்களையும் குவித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் இந்திய அணியானது மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் இந்த தொடரை தற்போதே கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து இந்த போட்டியில் அடைந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : இந்த தொடர் உண்மையிலேயே ஒரு கடினமான தொடராக அமைந்தது என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -

முதல் நான்கு போட்டிகளின் முடிவில் நாங்கள் இந்த தொடரை கைப்பற்றி இருப்பது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. எங்களது அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் உள்ள அனைவருமே திறமையான வீரர்கள். இந்த தொடரில் சில சவால்களை நாங்கள் ஒவ்வொரு போட்டியிலுமே எதிர்கொண்டோம். இருப்பினும் தற்போது கிடைத்துள்ள முடிவுகளின் அடிப்படையில் நாங்கள் செயல்பட்ட விதம் திருப்தி அளிக்கிறது.

முன்னணி வீரர்கள் அணியில் இல்லாமல் இளம் வீரர்களுடன் இப்படி ஒரு செயல்பாட்டை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி. டொமஸ்டிக் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட அவர்கள் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் மிகப்பெரிய சவால்களுக்கு இடையே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி உள்ளனர்.

- Advertisement -

எனக்கும் டிராவிட் பாய்க்கும் இளம் வீரர்களுக்கு சரியான சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் எண்ணமாக இருந்தது. அந்த வகையில் இந்த தொடரில் இளம்வீரர்கள் அனைவருமே சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன். துருவ் ஜுரேல் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி இருந்தாலும் அவர் முதல் இன்னிங்சில் விளையாடிய விதம் அவரது முதிர்ச்சியான செயல்பாட்டை வெளிக்காட்டியிருந்தது.

இதையும் படிங்க : 10 – 10 ரன்களாக பிரிச்சு ஆடுனோம்.. 4வது போட்டியில் இங்கிலாந்தை சாய்த்த.. ஆட்டநாயகன் துருவ் ஜுரேல் பேட்டி

அவரிடம் தெளிவான நல்ல ஷாட்டுகள் இருக்கின்றன. முதல் இன்னிங்சில் அவர் அடித்த 90 ரன்களே எங்களை இங்கிலாந்து அணியின் ஸ்கோருக்கு அருகில் அழைத்துச் சென்றது. அதேபோன்று இரண்டாவது இன்னிங்சிலும் அவர் சுப்மன் கில்லுடன் அமைத்த பாட்னர்ஷிப் மிகச் சிறப்பாக இருந்தது என துருவ் ஜுரேல் ஆட்டம் குறித்து ரோகித் சர்மா வெகுவாக பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement