டி20 உலககோப்பை : பாகிஸ்தானை வீழ்த்தப்போவது எப்படி? – ரோஹித் சர்மா அளித்த பதில் இதோ

Rohith
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் துவங்கிய டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தகுதிச்சுற்றுப் போட்டிகள் முடிவடையும் வேளையில் இன்னும் சில தினங்களில் சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் துவங்க உள்ளன. அக்டோபர் 22-ஆம் தேதி துவங்கும் சூப்பர் 12 சுற்றானது அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள வேளையில் அக்டோபர் 23-ஆம் தேதி இந்திய அணி தங்களது முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை மெல்போர்ன் மைதானத்தில் எதிர்கொள்ள இருக்கிறது.

INDvsPAK

- Advertisement -

ஏற்கனவே இந்த உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டபோதே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்ற வேளையில் அரங்கு முழுவதும் ரசிகர்களால் நிரம்பி இருக்கப் போகும் அந்தப் போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி குறித்த எதிர்பார்ப்பும் தற்போது ரசிகர்களின் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

கடந்த ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வி அடைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு அதற்கு பழி தீர்க்கும் விதமாக இந்திய அணி கட்டாயம் பாகிஸ்தான அணியை வெல்லும் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனும் தயார் என ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெளிப்படையாக தனது அதிரடியான கருத்தினை அளித்திருந்தார்.

INDvsPAK

இந்நிலையில் இன்னும் இரு தினங்களில் போட்டி துவங்க உள்ள வேளையில் தற்போது பாகிஸ்தான் அணியை வீழ்த்துவதற்கான திட்டம் குறித்தும் ரோகித் சர்மா வெளிப்படையான தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : தற்போது நமது அணியில் உள்ள 11 வீரர்களும் தங்களின் மனதை நிதானமாக வைத்துக்கொண்டு போட்டியின்போது திட்டங்களை பதற்றம் இன்றி செயல்படுத்தினாலே நமக்கு வெற்றி எளிமையாக வந்து சேரும். மற்ற போட்டிகளைப் போன்றே தான் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியும் நமக்கு இருக்கும்.

- Advertisement -

ஆனாலும் ஒரு பரபரப்பான இந்த போட்டியில் நாம் விளையாடும் போது நமது இயல்பான கிரிக்கெட்டை விளையாடினால் நிச்சயம் நமக்கு வெற்றி வந்து சேரும். அந்த வகையில் உலகமே எதிர்பார்க்கும் இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி வெல்வதற்கு சில விஷயங்களை நாம் செய்ய வேண்டியுள்ளது. அந்த வகையில் எதிர்வரும் இந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது இறுதி போட்டி குறித்து எல்லாம் யோசிக்காமல் அன்றைய ஒரு போட்டியை நாம் எவ்வாறு வெல்ல வேண்டும் என்பது குறித்து தனியாக திட்டமிட்டால் மட்டுமே எளிதாக நாம் பாகிஸ்தான அணியை வீழ்த்த முடியும்.

இதையும் படிங்க : ஏற்கனவே அவங்க ரொம்ப வெயிட். இதுல இது வேறயா? – ஆஸ்திரேலிய அணியில் இணைந்த அதிரடி வீரர்

முதலில் நமக்கு கிடைக்கும் இந்த வெற்றியை வைத்துக்கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று நாம் கோப்பையை நோக்கி முன்னேறலாம். தற்போதைக்கு நம்முடைய நோக்கம் பாகிஸ்தானை வெல்வது மட்டுமே பின்பு அனைத்தும் நம் வசம் வந்து சேரும் என ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement