IND vs SL : 3 ஆவது போட்டியில் மாற்றம் இருக்குமா? முன்கூட்டியே பதிலளித்த – ரோஹித் சர்மா

rohith
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இது தொடரில் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. ஏற்கனவே நடைபெற்ற முடிந்த முதலாவது போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது, இரண்டாவது போட்டியிலும் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.

INDvsSL

- Advertisement -

இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளதை அடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது ஜனவரி 15-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

ஏனெனில் இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு சரியான ஃபார்மில் இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும் என்பதன் காரணமாக தற்போது அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனை செய்யும் விதமாக அடுத்தடுத்த தொடர்கள் நடைபெற்று வருகின்றன.

rohith

இதில் ஏற்கனவே சீனியர் வீரர்கள் இடம்பெற வேண்டாம் என்ற விமர்சனம் எழுந்து வரும் வேளையில் அடுத்ததாக இந்திய அணியில் எவ்வித மாற்றமாவது இருக்குமா? என்று அனைவரும் எதிர்பார்க்கும் வேளையில் இரண்டாவது ஒருநாள் போட்டியின் முடிவிலேயே இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சில தெளிவான விளக்கங்களை அளித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : எதிர்வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படாது. எனவே தற்போதைய அணியில் எந்த மாற்றமும் செய்யவேண்டிய அவசியமும் எங்கள் அணிக்கு தேவைப்படவில்லை. அதேபோன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக அடுத்து வரவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

இதையும் படிங்க : அணிக்காக என்னாமா உழைக்கிறாரு, இனிமேல் யாராலும் ராகுல் இடத்தை டச் பண்ணவே முடியாது – வாசிம் ஜாபர் கூறும் காரணம் என்ன

இதன்மூலம் எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி உறுதியாகியுள்ளது என்றும் இந்த சில தொடர்களில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் அப்படியே உலக கோப்பை தொடர்களிலும் விளையாடுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement