IND vs ENG : ஒருநாள் தொடரை ஜெயித்த பிறகு இந்திய அணியின் ஸ்ட்ரென்த் மற்றும் வீக்னஸ் குறித்து பேசிய – ரோஹித் சர்மா

Rohit Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக தற்போது நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரையும் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் இருந்த வேளையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 260 ரன்கள் என்ற இலக்கினை 42.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து எட்டிய இந்திய அணியானது ஐந்து விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரையும் கைப்பற்றியது.

IND vs ENG TEam INDIA

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 125 ரன்கள் குவித்தார். மேலும் ஹார்டிக் பாண்டியா பந்துவீச்சில் 4 விக்கெடுகளை கைப்பற்றியது மட்டுமின்றி பேட்டிங்கிலும் 71 ரன்கள் குவித்து அசத்தினார். ஹார்டிக் பாண்டியா தொடர் நாயகனாகவும், ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து இந்திய அணியின் இந்த ஒருநாள் தொடர் வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு வந்த போது ஒரு அணியாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். அந்த வகையில் இந்த தொடரை கைப்பற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

Rishabh Pant and Hardik Pandya

கடந்த முறை நாங்கள் இங்கு வந்தபோது தோல்வி அடைந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது. இங்கிலாந்தில் ஒரு தொடரை கைப்பற்றுவது என்பது அவ்வளவு எளிதான விடயம் கிடையாது. ஆனால் இம்முறை நாங்கள் டி20 மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த போட்டியின் ஆரம்பத்தில் எங்களது டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தாலும் ஹார்டிக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்து எங்கள் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தனர்.

- Advertisement -

அதேபோன்று சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் கடந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் தற்போது மிக முக்கிய நபராக மாறி உள்ளார். அதே வேளையில் ஹார்டிக் பாண்டியாவும் தற்போது பந்து வீச்சில் தனது அசத்தலான செயல்பாட்டினை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார், ஒரு அணியாக இந்த வெற்றியை பெற்றதில் எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இருப்பினும் டாப் ஆர்டர் வீரர்கள் விரைவில் ஆட்டம் இழக்கும் எங்களது வீக்னஸ் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக கேட்ச்களை பிடித்த டாப் 10 தரமான ஃபீல்டர்களின் பட்டியல்

ஆனாலும் ஒரு தரமான அணி எப்படி வெற்றியை பெறும் என்பதை இந்திய அணி செய்து காண்பித்துள்ளது. இது நம்முடைய பலம் தான். இந்திய அணியில் தற்போது உள்ள இந்த பலத்தின் அடிப்படடையில் நாங்கள் இந்த தொடரை கைப்பற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. மேலும், எங்கள் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்க நினைக்கிறோம். அதன்படி இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என ரோகித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement