கவுண்டி கிரிக்கெட்டில் கோலிக்கு பதிலாக மற்றொரு இந்திய வீரர் தேர்வு..! யார் தெரியுமா..?

virat
- Advertisement -

சமீபத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கோலிக்கு முதுகெலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயம் சிறிது தான் என்றாலும் அவ்ருக்கு சில நாட்களாவது ஒய்வு அவசியம் என்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கவுண்ட்டி தொடரிலும், ஜூலை மாதம் நடக்க உள்ள டி20 போட்டிகளிலும் கோலி ஆடுவாரா என்று சந்தேகம் எழுந்தது.

அடுத்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி 2 டி20 போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட இந்திய அணி ஐயர்லாந்து செல்கிறது. இந்த போட்டிக்கான அணி வீரர்கள் பட்டியலை பி.சி.சி.ஐ ஏற்கனவே வெளியோட்டிருந்தது. இதை தொடர்ந்து ஜூலை மாதம் இங்கிலாந்திற்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாட இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது அந்த அணியின் கேப்டனாக கோலி செயல்பட இருந்தார்.

- Advertisement -

தற்போது இருக்கும் நிலவரப்படி பார்த்தல் இங்கிலாந்தில் நடந்துவரும் கவுண்டி போட்டிகளில் விராட் கோலி, லண்டன் லாயல் கோப்பை போட்டிகளில் 3 ஒரு நாள் போட்டிகளிலும், அதனை தொடர்ந்து 2 கவுண்டி போட்டிகளிலும் விளையாட இருந்தார் இந்நிலையில் கோலிக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதால் இந்த போட்டிகளில் விளையாட்டுவது சந்தேகம் என்று தெரியவந்துள்ளது.
rohit

இந்நிலையில் தற்போது கோலிக்கு பதிலாக கவுண்ட்டி போட்டியில் ரோஹித் சர்மா சுர்ரி கவுண்டி அணியில் விளையாடவுள்ளார். இதுபற்றி விராட் தெரிவிக்கையில் “ரோஹித் சர்மா கவுண்ட்டி அணியில் சேர்ந்திருப்பதை எண்ணி பெருமையடைகிறேன். என்னுடைய இழப்பு கவுண்டி அணி பந்து வீச்சாளர்களுக்கு ஏற்பட்ட லாபம் என்று நான் கருதுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement