என்னோட பெஸ்ட் பார்ட்னர் இவர்தான். வித்தியாசமான பதிலை அட்டகாசமாக கூறிய – ரோஹித் சர்மா

Rohit
- Advertisement -

இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது மீண்டும் ஒருமுறை ஐசிசி கோப்பையை வெல்லும் வாய்ப்பினை தவறவிட்டது. கடந்த 2011-ஆம் ஆண்டிற்கு பிறகு இம்முறை நிச்சயம் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஏற்பட்ட இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி வீரர்களையும் பெரிய வருத்தத்திற்குள் தள்ளியது.

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் களத்திலேயே கண்கலங்கிய நிகழ்வுகளையும் நம்மால் பார்க்க முடிந்தது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் நடைபெற்ற ஆஸ்திரேலியா தொடர் மற்றும் தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க தொடர் என இரண்டிலுமே ஓய்வு பெற்றுள்ள ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலே மீண்டும் திரும்ப இருக்கின்றனர்.

- Advertisement -

அதற்கு முன்னதாக தற்போது ஓய்வில் இருக்கும் ரோஹித் சர்மா தனது மனைவியுடன் வெளிநாடு சென்றுள்ளார். இவ்வேளையில் டிசம்பர் 13-ஆம் தேதி நேற்று அவர்கள் இருவரும் தங்களது எட்டாவது திருமண நாளை கொண்டாடினர். கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி ரித்திகா என்பவரை காதல் திருமணம் செய்த ரோகித்திற்கு 2018-ஆம் ஆண்டு சமைரா என்கிற அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதனை தொடர்ந்து பிரபலமான ஜோடியாக பார்க்கப்பட்டு வரும் ரோகித் மற்றும் ரித்திகா ஆகியோர் நேற்று தங்களது எட்டாவது திருமண நாளை கொண்டாடியிருந்தனர்.

இந்நிலையில் தற்போது ரோகித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ள ஒரு பதிவு அனைவரது மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் ரோகித் சர்மா தனது “பெஸ்ட் பார்ட்னர்ஷிப் ஆஃப் லைஃப்” அதாவது “வாழ்க்கையின் சிறந்த துணை ரித்திகா தான்” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள அவரது மனைவி ரித்திகாவும் :

- Advertisement -

என்னுடைய வாழ்க்கையை மாற்றியது நீங்கள் தான். உங்களுடைய வாழ்க்கையில் நான் நுழைந்த போதே என் வாழ்க்கை அழகானது. என்னுடைய சிறந்த நண்பர், என்னை மகிழ்விக்கும் ஒரு நபர், எனக்கு மிகவும் பிடித்த நபர், நான் உயிராக நேசிக்கும் ஒருவர் நீங்கள் தான் ரோஹித் என்று அவரும் தனது கருத்தினை பகிர்ந்துள்ளார். இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளித்திருந்த ஒரு பேட்டியில் :

இதையும் படிங்க : 41 பந்தில் 50.. முழுசா ஒரு மாசம் கூட ஆகல.. மீண்டும் சொதப்பிய பாகிஸ்தானை பொளந்த வார்னர்

உலகக் கோப்பை தோல்வியிலிருந்து இன்னும் நான் மீண்டும் வரவில்லை என்றும் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த பிறகு அடுத்த சில நாட்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்து இருந்தாகவும் அந்த நேரத்தில் உறவினர்கள், குடும்பத்தார், நண்பர்கள் என அனைவருமே எனக்கு ஆதரவளித்தனர். அதோடு இந்திய ரசிகர்களும் இந்திய அணியின் செயல்பாட்டை நினைத்து பெருமையாக பேசி வந்ததால் அதுவும் என்னை மெல்ல மெல்ல தேத்தி வருகிறது என்றும் கூறியிருந்தார்.

Advertisement