IND vs SL : இந்த இலங்கை தொடரில் நமக்கு கிடைத்த ஹீரோ இவர்தான் – ரோஹித் சர்மா புகழாரம்

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது நேற்று நடைபெற்ற கடைசி ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருந்த வேளையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் அசத்தலான வெற்றியை பெற்ற இந்திய அணியானது மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தி சாதனை படைத்தது.

- Advertisement -

இந்த மூன்றாவது போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 390 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கிய வேளையில் அடுத்ததாக விளையாடிய இலங்கை அணியானது 73 ரன்களுக்கு சுருண்டு 117 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்த தொடரின் வெற்றி குறித்து பேசியிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : இந்த தொடர் எங்களுக்கு மிகச் சிறப்பாக ஒன்றாக அமைந்தது. இந்த தொடரில் இருந்து பல பாசிட்டிவான விடயங்களை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்.

Siraj

அதிலும் குறிப்பாக இந்த தொடர் முழுவதுமே எங்களது பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு போட்டியிலும் நல்ல ரன் குவிப்பை வழங்கி இருந்தாலும் பந்துவீச்சில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

அவர் ஒரு அரிதான டேலண்ட் உடைய பந்துவீச்சாளர். கடந்த சில ஆண்டுகளாகவே அவருடைய வளர்ச்சி பிரமாதமாக உள்ளது .இந்திய அணிக்கு அவருடைய இந்த பந்துவீச்சு மேலும் பலத்தை தந்துள்ளதாக நினைக்கிறேன். அவர் இந்த போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்ற முடியவில்லை என்றாலும் அவர் எடுத்த இந்த நான்கு விக்கெட்டுகள் அந்த ஐந்து விக்கெட்டுகளுக்கு சமம் என்று நான் நினைக்கிறேன்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடருக்கு முன்பாகவே விராட் கோலி நிச்சயம் அந்த சம்பவத்தை செய்வாரு – சுனில் கவாஸ்கர் பேட்டி

அந்த அளவிற்கு முகமது சிராஜ் இந்த போட்டியில் அற்புதமாக செயல்பட்டார். இந்த தொடரில் நமக்கு கிடைத்த ஹீரோ அவர்தான் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இலங்கை அணிக்கெதிரான இந்த தொடரை முடித்த கையோடு அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

Advertisement