2024 டி20 உ.கோ ஜெயிக்க ரோஹித் சர்மாவின் அந்த திறமை இந்தியாவுக்கு வேணும்.. கைப் ஆதரவு

Mohammed Kaif 3
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்ற ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் மாபெரும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்த இந்தியா 2011 போல கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. குறிப்பாக ரோகித் சர்மா தலைமையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்ற இந்தியா இறுதிப்போட்டியில் 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதில் இடம் பெறாத ரோகித் சர்மா அடுத்ததாக நடைபெறும் தென்னாபிரிக்க டி20 தொடரிலும் ஓய்வெடுக்க உள்ளதால் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

ரோஹித் தேவை:
ஏனெனில் 2022 டி20 உலகக் கோப்பையில் கேப்டனாக பேட்டிங்கில் மிகவும் சுமாராக விளையாடிய ரோகித் சர்மா இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். மேலும் சமீப காலங்களாகவே ஐபிஎல் தொடரிலும் சொதப்பலாக செயல்பட்டு வருவதால் அவரை கழற்றி விட்டு 2024 டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை களமிறக்கும் வேலையை பிசிசிஐ துவங்கியுள்ளது.

இந்நிலையில் 2023 உலகக் கோப்பையில் அடித்து நொறுக்கி அதிரடியான துவக்கத்தை கொடுத்த பேட்ஸ்மேன் என்பதை தாண்டி கேப்டன்ஷிப் திறமைக்காக 2024 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா விளையாடுவது அவசியம் என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரோஹித் சர்மா ஒரு பேட்ஸ்மேனாக இருப்பதை விட கேப்டனாக 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு தேவை. நல்ல தலைமை பண்புகளை கொண்டுள்ள அவர் கண்டிப்பாக அத்தொடரில் இருக்க வேண்டும். குறிப்பாக 50 ஓவர் உலகக் கோப்பையில் அவர் கேப்டனாக அணியை முன்னின்று வழி நடத்தி தன்னுடைய வேலையில் சிறப்பாக செயல்பட்டார். எனவே அவருடைய அனுபவம் டி20 போட்டிகளிலும் தேவை”

இதையும் படிங்க: 10 நிமிஷம் மாதிரி இருந்துச்சு.. ஃபைனலில் பிரதமர் மோடியின் செயல் பற்றி.. மேக்ஸ்வெல் ஓப்பன்டாக்

“ரோகித் சர்மா ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சிறந்த வேலையை செய்துள்ளார். எனவே டி20 போட்டிகளிலும் அவர் கண்டிப்பாக இந்தியாவுக்கு தேவை” என்று கூறினார். அவர் கூறுவது போல பாண்டியாவை விட 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் மிகுந்த ரோகித் சர்மா பேட்ஸ்மேனாகவும் ஆரம்பத்திலேயே அடித்து நொறுக்கி நல்ல துவக்கத்தை கொடுக்கக் கூடியவர் என்பதால் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது அவசியமாகிறது.

Advertisement