ஸ்டோக்ஸை விட ரோஹித் அப்படி ஒன்னும் பண்ணிடல.. இந்தியாவின் வெற்றிக்கு காரணம் அவங்க தான்.. கிரேம் ஸ்வான்

Graeme Swann
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4 – 1 (5) என்ற கணக்கில் வென்ற இந்தியா ஐசிசி தர வரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறியுள்ளது. மேலும் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த இந்திய அணி 2012க்குப்பின் தொடர்ந்து 12 வருடங்களாக சொந்த மண்ணில் ஒரு தொடரில் கூட தோற்காமல் இருந்து வரும் சாதனையை தக்க வைத்துக் கொண்டது.

முன்னதாக இந்த தொடரில் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கிய இந்தியா பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் ஜெய்ஸ்வால், கில் போன்ற இளம் வீரர்களும் சர்பராஸ் கான், துருவ் ஜுரேல் போன்ற அறிமுக வீரர்களும் சிறப்பாக விளையாடி இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.

- Advertisement -

ஒன்னும் பண்ணிடல:
அதே சமயம் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்து கேஎல் ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் காயத்தால் விலகிய போது தடுமாறிய இந்திய அணியில் அதற்கு தகுந்த மாற்று வீரர்களை சரியாக கண்டறிந்து சிறப்பாக வழி நடத்திய கேப்டன் ரோகித் சர்மாவும் இந்த வெற்றியில் துருப்புச் சீட்டாக இருந்தார் என்றால் மிகையாகாது. இந்நிலையில் இந்த தொடரில் பென் ஸ்டோக்ஸை விட கேப்டனாக ரோகித் சர்மா பெரிதாக எதையும் மாற்றி வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் கிராம்ஸ் ஸ்வான் கூறியுள்ளார்.

மேலும் அஸ்வின், பும்ரா போன்ற இந்திய பவுலர்கள் தான் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அதிரடியாக விளையாட விடாமல் ரோகித் சர்மா தலைமையில் இந்தியாவுக்கு வெற்றி பெற்று கொடுத்ததாகவும் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார் இது பற்றி சமீபத்தில் பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா கேப்டனாக உயர்ந்தவர் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் அவருடைய பவுலர்கள் தான் அவருக்கான தந்திரங்களை செய்தனர்”

- Advertisement -

“ரோஹித் சர்மா சாதாரணமாக நன்றாக செயல்பட்டார். ஆனால் அதற்காக நீங்கள் இதை எடுத்துக் கொண்டு பென் ஸ்டோக்ஸ் மோசமாக கேப்டன்ஷிப் செய்தார் என்று சொல்ல முடியும் என்று நான் நினைக்கவில்லை. அந்த இடத்தில் நீங்கள் தவறான மரத்தை வெட்டுகிறீர்கள் என்று நினைக்கிறேன். உண்மையாக இந்த தொடரில் ரோகித் சர்மாவின் பவுலர்கள் அவருக்கு சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் முதல் போட்டியில் அசத்தவில்லை. ஆனால் கடைசி 4 போட்டியில் ரோகித் சர்மாவுக்கான வேலையை சரியாக செய்தனர்”

இதையும் படிங்க: 2024 ஐ.பி.எல் தொடருக்கான கொல்கத்தா அணியிலிருந்து வெளியேறிய நட்சத்திர வீரர் – என்ன காரணம் தெரியுமா?

“எடுத்துக்காட்டாக 100வது போட்டியில் அஸ்வின் 5 விக்கெட்டுகள் எடுத்தது அபாரமானதாகும். அதை நான் பார்க்கவில்லை. விரைவில் அவரை சந்தித்து என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்க உள்ளேன். அவர் 100வது போட்டியில் விளையாடிய வீரர்களில் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தினார் என்று நினைக்கிறேன். அதற்காக அஸ்வினுக்கு நீங்கள் தலை வணங்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement