IND vs AUS : முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா ஏன் விளையாடல தெரியுமா? – வெளியான உண்மை காரணம்

Rohith
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியானது நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

IND vs AUS

- Advertisement -

இந்த போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா கலந்து கொள்ள மாட்டார் என்றும் முதல் போட்டியில் ஹார்டிக் பாண்டியா தான் இந்திய அணியை வழிநடத்துவார் என்று ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அறிவித்தது.

அதோடு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த முதல் ஒருநாள் போட்டியில் குடும்ப கமிட்மென்ட் காரணமாக விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார் என்றும் அதன் பிறகு நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகளுக்கான அணியையும் அவரே வழிநடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rohith

இந்நிலையில் ரோகித் சர்மா இந்த முதலாவது ஒருநாள் போட்டியில் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்த உண்மை தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி ரோகித் சர்மா தனது மைத்துனன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் இந்த முதலாவது ஒருநாள் போட்டியை மட்டும் தவற விடுகிறார் என்றும் அதன் பின்னர் அவர் அணியில் இணைவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் ரோகித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றிய வேளையில் இந்த ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இதையும் படிங்க : IND vs AUS : முதல் ஒன்டே நடைபெறும் மும்பை வான்கடே மைதானம் எப்படி? புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்த தொடரானது மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுவதால் இந்த ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement