கே.எல் ராகுல், அக்சர் படேலை தொடர்ந்து இன்று திருமணம் செய்துள்ள இந்திய வீரர் – நேரில் சென்று வாழ்த்திய ரோஹித்

Rohit-Sharma
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணியானது எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் பங்கேற்க காத்திருக்கிறது.

அதன்படி அடுத்த 3 ஆவது டெஸ்ட் போட்டியானது மார்ச் மூன்றாம் தேதி இந்தூரில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக கிடைத்த ஓய்வு நேரத்தில் வீரர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு சென்று தற்போது பயிற்சிக்கு மீண்டும் திரும்பி உள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இந்த மூன்றாவது போட்டிக்கு முன்பாக தற்போது மும்பையில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாக்கூரின் திருமணத்தில் கலந்து கொண்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

அண்மையில் அடுத்தடுத்து இந்திய வீரர்கள் திருமணம் செய்து வரும் வேளையில் ஷர்துல் தாகூரும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் கே.எல் ராகுல், அக்சர் பட்டேல் ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். அதனை தொடர்ந்து ஹார்டிக் பாண்டியா இரண்டாவது முறையாக கோலாகலமாக திருமணத்தை நடத்தி முடித்தார்.

- Advertisement -

இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த ஷர்துல் தாகூரின் திருமணத்தை நேரில் சென்று வாழ்த்திய ஷ்ரேயாஸ் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வரும் ஷர்துல் தாகூர் நீண்ட காலமாக ரோகித் சர்மாவுடன் நெருக்கமான நட்பினை கொண்டவர் என்பதனால் ரோஹித் அவரை நேரில் சென்று வாழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : தோனி தான் உங்க கேரியரை முடிச்சாரா? சில ரசிகர்களின் விவாதத்துக்கு டிகே நேரடியாக கொடுத்த பதில் இதோ

அதோடு சக மும்பை வீரரான ஷ்ரேயாஸ் ஐயரும் இந்த விழாவில் பங்கேற்று ரோஹித்துடன் இருக்கும் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படமான தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement