2வது டெஸ்டில் பிரசித் கிருஷ்ணா நீக்கப்படுவாரா? ஜடேஜா குணமடைந்து விளையாடுவாரா? கேப்டன் ரோஹித் பதில்

Rohit Sharma Press 2
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி நடைபெறுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்கா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

மறுபுறம் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் சொதப்பிய இந்தியா முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்து 6வது இடத்திற்கு சரிந்த இந்தியா குறைந்தபட்சம் தொடரை சமன் செய்ய கேப் டவுன் நகரில் நடைபெறும் 2வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.

- Advertisement -

கேப்டன் ரோஹித் பதில்:
முன்னதாக சென்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் கோட்டில் ரவீந்திர ஜடேஜா காயத்தால் விளையாடாதது தோல்விக்கு காரணமானது. அதே போல முதல் போட்டியில் அறிமுகமாக களமிறங்கிய பிரசித் கிருஷ்ணா ரன்களை வாரி வழங்கி தோல்விக்கு காரணமாக அமைந்தார். எனவே 2வது போட்டியில் அவர் நீக்கப்பட்டு முகேஷ் குமாரும் அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 2வது போட்டியில் ரவீந்திர ஜடேஜா குணமடைந்துள்ளதால் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாக மறைமுகமாக தெரிவிக்கும் கேப்டன் ரோஹித் சர்மா அறிமுகப் போட்டியில் தடுமாறிய பிரசித் கிருஷ்ணா மீது நம்பிக்கை வைப்பதாக கூறியுள்ளார். இது பற்றி போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த போட்டியில் எந்த மாதிரியான பவுலர்கள் எங்களுக்கு வேண்டும் என்பதை பற்றி பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகத்திடம் நீண்ட நேரம் பேசினோம்”

- Advertisement -

“இப்போட்டியில் அனைத்து வீரர்களும் விளையாடுவதற்கு காயமின்றி தயாராக இருக்கின்றனர். காயங்கள் பற்றிய கவலை இம்முறை இல்லை. அதே சமயம் யாரை தேர்வு செய்வது என்பதை முதல் நாள் மாலையில் உட்கார்ந்து பேசி முடிவெடுக்க உள்ளோம். எங்களுடைய அணியின் பந்து வீச்சு கூட்டணியில் அனுபவமின்மை இருப்பதாக நான் கருதுகிறேன். இது போன்ற சமயங்களில் நீங்கள் அவர்கள் மீது நம்பிக்கையை காட்ட வேண்டும்”

இதையும் படிங்க: என்னுடைய 563 விக்கெட்டுகள் சாதனையை முறியடிக்கப்போவது அவர்தான் – கிளென் மெக்ராத் பாராட்டு

“ஏற்கனவே நான் சொன்னது போல பிரசித் கிருஷ்ணா தன்னுடைய முதல் போட்டியில் விளையாடினார். அனைத்து வீரர்களும் தங்களுடைய முதல் போட்டியில் விளையாடும் போது பதற்றத்துடன் சற்று தடுமாறுவது வழக்கம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே இப்போதும் நல்ல திறமை கொண்டுள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்துவார் என்று நான் நம்புகிறேன். அதனால் ஒவ்வொரு வீரர் மீதும் நம்பிக்கை வைத்து ஆதரவு கொடுப்பது முக்கியம்” என்று கூறினார்.

Advertisement