இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது ஜூலை 12-ஆம் தேதி இன்று டோமினிக்கோ நகரில் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள்? என்பதே அனைவரது கேள்வியாகவும் இருந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக துவக்க வீரராக களமிறங்கப்போவது யார்? புஜாராவின் மூன்றாவது இடத்தை நிரப்பப்போவது யார்? என்ற பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. இந்நிலையில் அவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சில முக்கிய தகவல்கள் தகவல்களை முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய கிரிக்கெட் தற்போது ஒரு இடது கை பேட்ஸ்மேனை தேடி வருகிறது. அதற்கு பதிலாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கிடைத்துள்ளார். ஓப்பனர்களாக வலது கை மற்றும் இடது கை ஆட்டக்காரர்கள் இருப்பது அனைத்து கூடுதல் சாதகம். அந்த வகையில் ஜெய்ஸ்வால் என்னுடன் துவக்க வீரராக களம் இறங்குவார்.
அதேபோன்று மூன்றாவது இடத்தில் சுப்மன் கில் விளையாடுவார். ஏனெனில் சுப்மன் கில் தானே முன்வந்து பயிற்சியாளர் டிராவிடிடம் சென்று நான் மூன்றாவது வரிசையில் பேட்டிங் செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் தனது கிரிக்கெட் கரியரில் மூன்றாவது இடத்தில் தான் முழுவதுமாக பேட்டிங் செய்துள்ளார். எனவே அவர் அந்த முடிவை எடுத்துள்ளார்.
இந்த வெஸ்ட் இண்டீஸ் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளதால் நாங்கள் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க உள்ளோம். இந்த தொடரில் எதிர்பாரா விதமாக எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் அதிகளவு வீரர்கள் இல்லை. நிறைய பேர் காயத்தினால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதையும் படிங்க : வீடியோ : ரஹானேவை பாத்து நீங்க சிரிக்கலாமா? ரோஹித் சர்மாவை விளாசும் ரசிகர்கள் – காரணம் என்ன
அதனால் பல அனுபவமிக்க வீரர்கள் இந்த தொடரில் இடம் பெறவில்லை என ரோகித் சர்மா கூறியுள்ளார். இதன்மூலம் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த டெஸ்ட் தொடரில் அறிமுக வீரராக களமிறங்கப்போவதை ரோகித் சர்மா உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.