விராட் கோலியிடம் இருந்து தான் அந்த விஷயத்தை கத்துக்கிட்டேன்.. வெளிப்படையாக பாராட்டிய – ரோஹித் சர்மா

Rohit-and-Kohli
- Advertisement -

தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது ஏற்கனவே அங்கு நடைபெற்ற டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது வரும் டிசம்பர் 26-ஆம் தேதி துவங்க உள்ளது.

ஏற்கனவே இந்த சுற்றுப்பயணத்தில் டி20 மற்றும் ஒருநாள் தொடர்கான அணியில் ஓய்வில் இருந்த விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் மீண்டும் விளையாட இருப்பதினால் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

அதோடு கடந்த 1992-ஆம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் அணியானது இதுவரை ஒரு முறை கூட அங்கு நடைபெற்ற டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை எனவே இம்முறை நிச்சயம் தென்னாப்பிரிக்க நாட்டில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சக வீரரான விராட் கோலி குறித்த சுவாரசியமான சில விடயங்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வாறு கேப்டன்சி செய்ய வேண்டும் என்பதை நான் விராட் கோலியை பார்த்து தான் கற்றுக் கொண்டேன்.

- Advertisement -

டெஸ்ட் போட்டிகளில் ஒரு கேப்டனாக விராட் கோலி பீல்டர்களை சரியான திசையில் நிற்க வைப்பார். அதோடு பந்துவீச்சாளர்களையும் சரியான முறையில் பயன்படுத்துவார். குறிப்பிட்ட நேரம் வரை விக்கெட் கிடைக்கவில்லை என்றாலும் எதிரணியின் பேட்ஸ்மேன்கள் மீது அழுத்தத்தை கொடுக்கும் அளவிற்கு அவர் தனது செயல்பாடுகளை தொடர்ச்சியாக செய்து கொண்டிருப்பார். அதன் காரணமாக பேட்ஸ்மேன்களும் தவறினை செய்து ஆட்டமிழப்பார்கள்.

இதையும் படிங்க : இதுக்கு பேர் தான் பகல் கொள்ளையா? பாகிஸ்தான் வாரியத்தை ஆதாரத்துடன் விளாசிய கனேரியா.. காரணம் என்ன?

அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வாறு சிறப்பாக கேப்டன்சி செய்ய வேண்டும் என்பதை விராட் கோலியின் அருகில் இருந்து நான் கற்றுக் கொண்டுள்ளேன். அதைத்தான் தற்போது நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் பயன்படுத்தியும் வருகின்றேன். நிச்சயம் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் சவாலாக இருந்தாலும் இந்த தொடரை கைப்பற்ற முயற்சிப்போம் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement