3ஆவது டி20 : டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் தேர்வு – அணியில் செய்யப்பட்டுள்ள 3 மாற்றங்கள்

INDvsRSA-Toss
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இந்த தொடரினை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று இந்தூர் மைதானத்தில் நடைபெற உள்ளது.

INDvsRSA Cup

- Advertisement -

சற்றுமுன் நடைபெற்ற டாசில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த போட்டியில் முதலில் இந்திய அணி பந்து வீசும் என அறிவித்தார். அதன்படி தற்போது தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது.

இந்நிலையில் ஏற்கனவே தொடரை இந்திய அணி கைப்பற்றி விட்டதால் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இன்று எதிர்பார்த்தபடியே அணியில் மூன்று முக்கிய மாற்றங்களை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நிகழ்த்தியுள்ளார்.

KL-RAHUL

அதன்படி துவக்க வீரரான கே.எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பந்துவீச்சாளர்களின் வரிசையில் ஹர்ஷல் பட்டேலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மூவருக்கும் பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர்.

- Advertisement -

டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற இருக்கும் இந்த கடைசி டி20 கிரிக்கெட் போட்டியானது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : “ரொம்ப கஷ்டமா தான் இருக்கு. ஆனாலும்” காயத்திற்கு பிறகு – ரசிகர்களுக்கு மெசேஜ் குடுத்த பும்ரா

1) ரோஹித் சர்மா, 2) சூரியகுமார் யாதவ், 3) ஷ்ரேயாஸ் ஐயர், 4) ரிஷப் பண்ட், 5) தினேஷ் கார்த்திக், 6) அக்சர் படேல், 7) அஷ்வின், 8) ஹர்ஷல் படேல், 9) முகமது சிராஜ், 10) தீபக் சாகர், 11) உமேஷ் யாதவ்.

Advertisement