IND vs SL : 3 ஆவது ஒருநாள் போட்டியில் எதிர்பார்த்தது போலவே 2 மாற்றத்தை செய்த ரோஹித் – தமிழக வீரருக்கு வாய்ப்பு

INDvsSL
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது அந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது இன்று திருவனந்தபுரம் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

INDvsSL

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி தற்போது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரை ஏற்கனவே இந்திய அணி கைப்பற்றி விட்டதால் அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தது போலவே இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் இரண்டு மாற்றங்களை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மேற்கொண்டுள்ளார்.

அதன்படி ஆல்ரவுண்டான ஹார்திக் பாண்டியா வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சூரியகுமார் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக்குக்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

Washington-Sundar

அவர்கள் இருவரை தவிர்த்து வேறு எந்த மாற்றமும் அணியில் செய்யப்படவில்லை. அதன்படி இந்த மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

- Advertisement -

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) சூரியகுமார் யாதவ், 7) வாஷிங்டன் சுந்தர், 8) அக்சர் படேல், 9) குல்தீப் யாதவ், 10) முகமது ஷமி, 11) முகமது சிராஜ்.

இதையும் படிங்க : இந்த வருஷம் அவர் மட்டும் ஐ.பி.எல் ஆடுனா அவரை நம்ம டீம்லயே சேக்க கூடாது – கபில் தேவ் காட்டம்

இந்த போட்டியில் வெற்றி பெற்று இலங்கை அணியை வாஷ் அவுட் செய்யும் முனைப்புடன் இந்திய அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியாவது பெற்றுக் கொள்ளலாம் என்கிற முனைப்பில் இலங்கை அணியும் விளையாடி வருவதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement