IND vs WI : முதல் டி20 போட்டியில் வித்தியாசமான முடிவை கையில் எடுத்த ரோஹித் சர்மா – விவரம் இதோ

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டியானது இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது டிரினிடாட் நகரில் உள்ள பிரைன் லாரா ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான் முதலில் பந்துவீசுவதாக தீர்மானம் செய்தார்.

Shreyas Iyer IND vs WI

- Advertisement -

அதனைத்தொடர்ந்து தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் பிளேயிங் லெவனில் இருப்பார்கள் என்று பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய அணியில் ஏகப்பட்ட மாற்றங்களை அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்துள்ளார்.

அதன்படி துவக்க வீரராக ரோகித் சர்மாவுடன் சூரியகுமார் யாதவ் இன்றைய போட்டியில் களமிறங்கினார். அதுமட்டும் இன்றி இந்திய அணியில் வித்தியாசமான முடிவை கையில் எடுத்த ரோகித் சர்மா மூன்று ஸ்பின்னர்களுடன் களமிறங்கியுள்ளார்.

ashwin 1

அதன்படி சுழற்பந்து வீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா, தமிழக வீரர் அஷ்வின் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் இந்த போட்டியில் விளையாடுகின்றனர். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக அகில் ஹுசைன் மட்டும் ஸ்பின்னராக விளையாடுகிறார்.

- Advertisement -

அதேவேளையில் இந்திய அணி மூன்று ஸ்பின்னர்களுடன் விளையாடும் வித்தியாசமான முடிவினை கையில் எடுத்துள்ளது. இன்றைய முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : ஐபிஎல் விரிவாக்கம் சரி ஆனால் அதை மட்டும் செய்யாதீங்க – கோரிக்கையுடன் ஆஸி ஜாம்பவான் கேள்வி

1) ரோஹித் சர்மா, 2) சூரியகுமார் யாதவ், 3) ஷ்ரேயாஸ் ஐயர், 4) ரிஷப் பண்ட், 5) ஹார்டிக் பாண்டியா, 6) தினேஷ் கார்த்திக், 7) ரவீந்திர ஜடேஜா, 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) புவனேஷ்வர் குமார், 10) ரவி பிஷ்னோய், 11) அர்ஷ்தீப் சிங்

Advertisement