டெஸ்ட் தொடரை வென்றதும் கேப்டன் ரோஹித் செய்த செயல் – ரசிகர்கள் மத்தியில் குவியும் பாராட்டு

IND 1
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரானது மார்ச் மாதம் 4-ஆம் தேதி துவங்கியது. மொகாலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த இந்திய அணியானது மார்ச் 12-ஆம் தேதி பெங்களூரு நகரில் துவங்கிய இந்த 2-வது டெஸ்ட் போட்டியிலும் 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை தொடர்ந்து டெஸ்ட் தொடரையும் வாஷ் அவுட் செய்து மிகப் பிரமாதமான வெற்றி கண்டது.

IND

இந்த டெஸ்ட் தொடரில் ஒட்டுமொத்தமாகவே இந்திய அணி வீரர்கள் அனைவரது செயல்பாடும் திருப்திகரமாக இருந்ததால் தற்போது இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு உட்பட்ட இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஒரு பெரிய பிளஸ் என்றே கூறலாம்.

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின்னர் வெற்றிக்கான கோப்பை இந்திய அணிக்கு பரிசளிக்கப்பட்ட போது கேப்டன் ரோகித் சர்மா செய்த செயல் ஒன்று தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று வருகிறது. அந்த வகையில் கேப்டனாக வெற்றிக் கோப்பையை கையில் ஏந்திய பின்னர் நேராக இளம் வீரர்களிடம் சென்ற ரோகித் சர்மா அதனை யாரிடம் கொடுத்தார் தெரியுமா?

panchal

இந்த தொடரில் இந்திய அணியுடன் இணைந்திருந்த புதுமுக வீரர்களான பிரியங்க் பன்சால் மற்றும் சவுரப் குமார் ஆகிய இருவரிடமும் கொடுத்தார். அவர்கள் இருவரின் கையில் கோப்பை இருந்தபோதுதான் இந்திய வீரர்கள் அனைவரும் இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர்.

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடருக்கான அணியில் இவர்கள் இருவரும் இடம் பிடித்து இருந்தாலும், பிளேயிங் லெவனில் ஒருமுறை கூட இவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இருப்பினும் உள்ளூர் போட்டிகளில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம்பிடித்த அவர்களை கவுரவிக்கவே அந்த புதுமுக வீரர்களிடம் கேப்டன் ரோகித் சர்மா கோப்பையை கொடுத்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடும் கூறினார்.

இதையும் படிங்க : இதனால் தான் அஷ்வினை உலகின் மிகச்சிறந்த பவுலர் என்று சொல்கிறேன் – ரோஹித் சர்மா கொடுத்த விளக்கம்

இதேபோன்று இந்திய அணி புதுமுக வீரர்கள் கையில் கோப்பையை கொடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவது புதிதில்லை என்றாலும் திறமையை வெளிப்படுத்தி வாய்ப்பினை பெற்று அணியில் இணையும் இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ரோகித் சர்மா செய்த இந்தச் செயலானது ரசிகர்கள் மத்தியில் பெரிய பாராட்டைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement