வீடியோ : இந்த வீடியோவை பாத்தா கோலிக்கும், ரோஹித்துக்கும் சண்டைனு இனிமே யாரும் சொல்ல மாட்டாங்க

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்ததால் முதல் இன்னிங்சை தற்போது இந்திய அணி வெற்றிகரமாக விளையாடி முடித்துள்ளது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 574 ரன்களை எடுத்திருந்தபோது முதல் இன்னிங்சை இந்திய அணி கேப்டன் ரோகித் டிக்ளேர் செய்தார்.

அதனை தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சை விளையாடி வரும் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் குவித்து 466 ரன்கள் பின்தங்கியுள்ளது. இதன் காரணமாக தற்போதே இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது என்று கூறலாம். அந்த அளவிற்கு தற்போது இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் விராத் கோலிக்கு ஏற்கனவே போட்டியின் முதல் நாள் அன்றே இந்திய அணியின் சார்பில் பல கௌரவங்கள் வழங்கப்பட்டது.

- Advertisement -

அதனை தொடர்ந்து போட்டியின் இரண்டாம் நாளான இன்று விராட் கோலியை கவுரவிக்க ரோஹித் செய்த செயல் ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணி முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தவுடன் அடுத்து பீல்டிங் செய்ய அனைத்து வீரர்களும் மைதானத்தை நோக்கி நடந்தனர். அப்போது கோலி முன்கூட்டியே மைதானத்திற்குள் சென்றார்.

இதனைக்கண்ட ரோகித் சர்மா அவரை அழைத்து மீண்டும் வெளியில் சென்றுவிட்டு திரும்பி வருமாறு கூறினார். இதற்கு ஏன் என விராட் கோலி கேள்வி எழுப்ப ரோஹித் நீங்கள் போய் திரும்பி வாருங்கள் என்று கூறியபடி அவரை மைதானத்திலிருந்து பெவிலியனுக்கு அனுப்பினார். பின்னர் பெவிலியனிலிருந்து விராட் கோலி திரும்பி வந்தபோது அவருக்கு இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் இருபுறமும் நின்று அரண் அமைத்து கவுரவ வரவேற்பினை (Guard of Honour) கொடுத்தனர்.

- Advertisement -

இந்த மரியாதையை சற்றும் எதிர்பாராத விராட்கோலி மிகுந்த மகிழ்ச்சியுடன் ரசிகர்களின் கரகோஷத்தின் மத்தியிலும், வீரர்களின் அரணுக்கு மத்தியிலும் உள்ளே நுழைந்தார். சமீப காலங்களாகவே ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இடையே பிளவு உள்ளது என்றும் அவர்கள் இடையே சண்டை என்றும் செய்திகள் வெளிவந்த நிலையில் இப்படி ரோகித் சர்மா விராட் கோலி இப்படி கௌரவித்தது அவர்களிடையே உள்ள பிணைப்பை காட்டுகிறது.

இதையும் படிங்க : வார்னே சாதனைகளும், போதைபொருள், கள்ள உறவு, விவாகரத்து சர்ச்சைகளும் – முழு வாழ்க்கை பயணம் இதோ

இந்த வீடியோவை முழுவதுமாக பார்த்தால் நிச்சயம் உங்களுக்கு விராத் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இடையே எந்தவித மனஸ்தாபமும் இல்லை என்றும் அவர்கள் நல்ல நண்பர்கள்தான் என்பதும் தெரியவரும். ரோஹித் சர்மாவின் இந்த செயலானது தற்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement