சாம்பியன் பட்டத்தை வென்றாலும் இந்தவொரு கஷ்டம் எனக்குள்ள இருக்கு – ரசிகர்களுக்காக மனம் வருந்திய ரோஹித் சர்மா

Rohith
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் குவித்தது.

MIvsDC

- Advertisement -

அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 50 பந்துகளில் 65 ரன்களும், பண்ட் 38 பந்துகளில் 56 ரன்கள் குவித்தனர். அவர்களை தவிர மற்ற யாரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. மும்பை அணி சார்பாக டிரென்ட் போல்ட் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 30 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், குல்டர்நைல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதன்பின்னர் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி டெல்லி அணியின் பந்துவீச்சை அனாயசமாக எதிர்கொண்டது. இறுதியில் 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரரான ரோகித் சர்மா 51 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இறுதியில் இஷான் கிஷன் 19 பந்துகளில் 33 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக டிரென்ட் போல்ட் தேர்வானார்.

Ishan kishan

மும்பை அணி பெற்ற இந்த வெற்றியின் மூலம் ஐந்தாவது முறையாக ரோஹித் சர்மா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி இந்தாண்டும் பட்டத்தை வென்று நடப்பு சாம்பியனாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். மேலும் சில வார்த்தைகளை வருத்தமாகவும் கூறியிருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

இந்த வெற்றி நிச்சயம் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக இந்த மைதானத்தில் நாங்கள் எங்களது ரசிகர்களை தவறவிடுகிறோம். மேலும் வான்கடே மைதானத்தை மிகவும் தவறவிடுகிறோம். அடுத்த வருஷம் நிச்சயம் வான்கடே மைதானத்தில் எங்கள் ரசிகர்களின் முன்னிலையில் நாங்கள் விளையாட ஆசைப்படுவதாகவும் உருக்கமாக ரோஹித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement