நான் உங்களை தேர்வு செய்யவில்லை. இவர்கள் தான் உங்களை செலக்ட் பண்ணாங்க – உத்தப்பா குறித்து பேசிய தோனி

uthappa
- Advertisement -

14வது ஐபிஎல் லீக் தொடர் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. ஒவ்வொரு அணிகளுமே ஏற்கனவே தங்களது வலைப்பயிற்சியை ஆரம்பித்து விட்ட நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தற்போது சென்னையிலிருந்து மும்பைக்கு சென்றுள்ளது. முதல் 5 போட்டிகள் மும்பையில் சென்னை அணி ஆட இருப்பதால் சென்னை அணி மும்பை சென்று அங்கு வலை பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

csk

- Advertisement -

இந்நிலையில் டிரேடிங் முறையில் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாங்கப்பட்ட ராபின் உத்தப்பா , சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனியின் தலைமையின் கீழ் விளையாட போவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று சமீபத்தில் கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் டிரேடிங் முறையில் நான் வாங்கப்பட்ட போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். தோனியின் தலைமையின் கீழ் ஆடப் போவது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

uthappa 1

பயிற்சியில் ஈடுபட்டிருந்த என்னிடம் தோனி வந்து உரையாடினார் , அப்போது அவர் நான் உங்களை தேர்ந்தெடுக்கவில்லை உங்களது திறமை மற்றும் ஆற்றலைக் கண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாகிகளும் கோச் மட்டுமே உங்களை சென்னை அணிக்காக தேர்ந்தெடுத்துள்ளனர் என்று என்னிடம் கூறினார். தோனி அவ்வாறு கூறியதற்கு பின்பு ஒரு காரணம் இருக்கிறது , எந்த ஒரு வீரரும் சிபாரிசு முறையில் விளையாடுவதை விரும்ப மாட்டார்கள்.

Uthappa

அதை நான் உறுதிப்பட தெரிந்து கொள்ளவே தோனி என்னிடம் உங்களது திறமைக்கு தான் இந்த அணியில் இடம் கிடைத்தது என்று என்னிடம் கூறினார். மேலும் பேசிய உத்தப்பா எனது முழு திறமையையும் பங்களிப்பும் இந்த வருடம் சென்னை அணிக்காக கொடுக்க உள்ளேன் என்றும் தோனியின் தலைமையின் கீழ் மிக சிறப்பாக சென்னை அணி இந்த ஆண்டு செயல்பட்டு தொடரை கைப்பற்ற போட்டி போடும் என்றும் கூறினார்.

Advertisement