இதென்ன புதுசா? சாம்சன் கழற்றி விடப்பட இதான் காரணம்.. ரசிகர்களுக்கு வேற வழியில்லை.. உத்தப்பா கருத்து

Robin Uthappa 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் கௌதம் கம்பீர் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றதால் சில அதிரடியான மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. குறிப்பாக ஹர்திக் பாண்டியா புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் அவரை மொத்தமாக கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு சூரியகுமார் யாதவ் மற்றும் சுப்பன் கில் ஆகியோரை கேப்டனாகவும் துணை கேப்டனாகவும் தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால் டி20 அணியில் அபிஷேக் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது. அதே போல ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

சாம்சனுக்கு புதுசில்லை:
ஏனெனில் தென்னாப்பிரிக்க மண்ணில் விளையாடிய தனது கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்த அவர் இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். ஆனால் இந்தியா விளையாடப் போகும் அடுத்த ஒருநாள் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதே ரசிகர்களை ஆதங்கப்பட வைக்கிறது. சொல்லப்போனால் 2015இல் அறிமுகமான அவருக்கு இதுவரை இந்திய அணியில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் கூட வாய்ப்பு கிடைத்ததில்லை.

இருப்பினும் 10 வருடங்கள் கடந்தும் அவர் அதே பழைய பரிதாபத்தை சந்தித்து வருகிறார். இந்நிலையில் சஞ்சு சாம்சன் இப்படி கழற்றி விடப்படுவது புதிதல்ல என ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். இம்முறை தலைமை பொறுப்பில் கௌதம் கம்பீர் வந்ததாலேயே சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

எனவே இந்திய அணிக்கு ஆதரவு கொடுப்பதை தவிர்த்து ரசிகர்களுக்கு வேறு வழியில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “சஞ்சு சாம்சன் இப்படி ஒரு நிலைமையை சந்திப்பது முதல் முறையா? இந்த நிலைமையை அவர் சந்திப்பது இது கடைசி முறை என்றும் நான் நினைக்கவில்லை. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவருடைய புள்ளி விவரங்கள் சிறப்பாக உள்ளது”

இதையும் படிங்க: 16 வயசுலயே ஸ்லெட்ஜிங்கில் காப்பாத்துனாரு.. 2007 பாத்து தான் விளையாடவே வந்தேன்.. குரு யுவராஜ் பற்றி அபிஷேக்

“இருப்பினும் தலைமைப் பொறுப்பில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே அது கொஞ்சம் செட்டிலாகும் வரை நம்மைப் போன்ற ரசிகர்கள் இந்திய அணிக்கு ஆதரவு கொடுத்து செட்டிலாகத் தேவையான நேரத்தை கொடுக்க வேண்டும். சஞ்சு சாம்சன் மற்ற வீரர்களுடன் ஏற்பட்ட போட்டியால் வெளியேற்றப்படவில்லை. கண்டிப்பான அவருக்கான நேரத்தில் வாய்ப்பு கிடைக்க வேண்டும். அப்படி வாய்ப்பு கிடைக்கும் போது அவர் அதை மிகச் சிறப்பாக செயல்பட்டு இறுக்கமாக பிடித்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

Advertisement