இந்திய அணிக்குள் அந்த புகைச்சலை ஏற்படுத்துவது கோலி, ராகுலா தான் இருக்கனும்.. உத்தப்பா அதிருப்தி

Robin Uthappa 2
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா 10 வருடங்கள் கழித்து தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறாமல் வெளியேறியது. முன்னதாக அந்தத் தொடரின் ரோகித் இல்லாத போது ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு பதிலாக ஒரு சீனியர் வீரர் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட விரும்பியதாக செய்தி வெளியானது.

அதனால் அந்த சீனியர் வீரர் சொந்த இடத்திற்காக விளையாடுவதாகவும் செய்திகள் தெரிவித்தன. அந்த நிலையில் இந்திய அணியில் கேப்டன்ஷிப் சம்பந்தமாக சண்டை இருப்பது உண்மையாக தெரிவதாக தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் சமீபத்தில் கூறியிருந்தார். மேலும் 2006 தென் ஆப்பிரிக்க அணியை போல தற்போதைய இந்திய அணியில் நெருப்பில்லாமல் புகையாது என்றும் அவர் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்திய அணிக்குள் புகை:

இந்நிலையில் அந்த சீனியர் விராட் கோலி அல்லது கேஎல் ராகுலாக இருக்கலாம் என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஏதாவது நடந்தால் அதை நான் நேரடியாக சொல்லக் கூடிய நபர். அணிக்குள் தனி நபர்கள் இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் ஒரு தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தனி நபர்கள் பற்றி நான் பேச மாட்டேன்”

“ஏனெனில் ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனியே மனநிலை மற்றும் வழி இருக்கும். எனவே அவர்களைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. அவர்கள் சுமாராக விளையாடினால் நான் உத்வேகத்துக்கு தேவையான மெசேஜ் கொடுப்பேன். அதைத் தவிர்த்து எதுவும் பேசமாட்டேன். ஆனால் அந்த சீனியர் வீரர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதை மக்கள் யூகமாக தெரிவிக்கிறார்கள்”

- Advertisement -

கேப்டன்ஷிப் பொறுப்பு:

“என்னைப் பொறுத்த வரை இந்திய அணியில் நெருப்பு இல்லாமல் புகையாது. அது கேஎல் ராகுல், அல்லது விராட் கோலியாக இருக்கலாம். ராகுலும் 8 – 9 வருடங்களாக இருப்பதால் சீனியராக கருதலாம்” என்று கூறினார். முன்னதாக இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்துள்ள விராட் கோலி 2021 ஜனவரியுடன் தாமாக ராஜினாமா பதவியை ராஜினாமா செய்தார்.

இதையும் படிங்க: சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோரின் ஒருநாள் கரியர் ஓவர்.. காரணம் இதுதான் – ஆகாஷ் சோப்ரா கருத்து

அந்த காலகட்டங்களில் கணிசமான போட்டிகளில் கேப்டனாக விளையாடிய ராகுல் சமீப காலங்களில் பேட்டிங்கில் அசத்தவில்லை. அதனால் அவரிடம் இருந்த துணை கேப்டன்ஷிப் பதவியையும் பிசிசிஐ பறித்தது. அடுத்ததாக ஜஸ்ப்ரித் பும்ரா புதிய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement