விராட் கோலி சொன்னதையும் பொருட்படுத்தாமல் நடந்த பண்ட் – அதனால தான் பிரச்சைனையே வந்திருக்கு

pant
- Advertisement -

இன்று காலையில் இருந்தே சமூக வலைதள பக்கங்களில் நாம் அதிகம் பார்க்கப்படும் செய்தியாக இந்திய வீரர்கள் இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் பாதிப்பிற்கு உள்ளானது மட்டும்தான். இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு மத்தியில் ஒரு மாத காலம் இடைவெளி உள்ளதால் வீரர்களுக்கு மூன்று வாரங்கள் ஓய்வு விடப்பட்டுள்ளது.

INDvsENG 1

- Advertisement -

இதன் காரணமாக வீரர்கள் தாங்கள் பயோ பபுள் பாதுகாப்பு வளையத்தில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அதே வேளையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலோ அல்லது கொண்டாட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும் இடங்களுக்கோ வீரர்கள் செல்லக்கூடாது என்று கூறப்பட்டது.

இந்நிலையில் கொரோனா உறுதியான இரு வீரர்களின் ஒருவரான ரிஷப் பண்ட் இங்கிலாந்தில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு பார்வையாளராக சென்றுள்ளார். ஏற்கனவே பயோ பபுளில் இருந்து வெளியேறும் போது இந்திய அணியின் கேப்டன் கோலி வீரர்கள் அனைவரிடமும் வெளியில் எங்கு சென்றாலும் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும், கொண்டாட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

pant 1

ஆனால் கோலியின் இந்த எச்சரிக்கையும் மீறி ரிஷப் பண்ட் ரசிகர்கள் அதிகம் கூடும் யூரோ கோப்பை கால்பந்து போட்டியை காண சென்றுள்ளார். அந்த ஸ்டேடியத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்பு திறந்த வெளியில் இருந்த பண்டை கண்ட இந்திய ரசிகர்கள் அவருடன் வந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இந்த சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளன.

pant 2

இந்நிலையில் கோலியின் எச்சரிக்கையையும் மீறி ரசிகர்கள் அதிகம் பங்கு பெறும் கால்பந்து தொடரை காண சென்ற ரிஷப் பண்ட் மீது கோலி அதிருப்தி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ரிஷப் பண்ட் பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்றும் அதன் பின்னர் அவருக்கு மீண்டும் நெகட்டிவ் வந்தால் மட்டுமே அவர் இந்த தொடரில் விளையாடமுடியும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement