Rishabh Pant : நான் பந்துவீச்சாளர்கள் பற்றி எல்லாம் யோசிப்பது கிடையாது. இதில் மட்டுமே முடிவாக இருப்பேன் – பண்ட் பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 26 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும்

Pant
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 26 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

Iyer

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது டெல்லி அணி. அதன்படி துவக்க வீரர்களாக இங்கிலாந்து அணியை சேர்ந்த டென்லி அறிமுக வீரராக களமிறங்கினார். அவருடன் சுபமான் கில் களமிறங்கினார்.

அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக கில் 39 பந்தில் 65 ரன்களும், ரசல் 21 பந்தில் 45 ரன்களும் குவித்தனர். இதனால் டெல்லி அணிக்கு 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது.

Denly

பிறகு ஆடிய டெல்லி அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக தவான் 63 பந்தில் 97 ரன்களை அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். மேலும், ஆட்டநாயகன் விருதினையும் தட்டிசென்றார்.

- Advertisement -

Dhawan 1

போட்டி முடிந்து பேசிய ரிஷப் பண்ட் கூறியதாவது : நான் என் மனநிலையை எப்போதும் தெளிவாக வைத்து கொள்வேன். அப்போது தான் பந்துகளுக்கு ஏற்றார் போல் விளையாட முடியும். போட்டியை இறுதிவரை எடுத்து சென்று விரைவாக முடிக்க ஆசைப்பட்டேன். இந்த மைதானத்தில் பேட்டிங் செய்ய மகிழ்ச்சியாக இருந்தது.

Pant 1

நான் டி20 போட்டிகளில் சேசிங் செய்யும்போது பவுலர் என்ன நினைக்கிறார், எங்கு பந்துவீச போகிறார் என்றெல்லாம் யோசிப்பது கிடையாது. எங்கு போட்டாலும் அடிக்க வேண்டும் என்ற தெய்வானை சிந்தனையுடனும், என் திறமையின் மீது நம்பிக்கை கொண்டே விளையாடுவேன். தவான் இறுதிவரை நின்று அணியை வெற்றிபெற வைத்தது பார்ப்பதற்கு நன்றாக இருந்தது என்று பண்ட் கூறினார்.

Advertisement