சீப் விளம்பரத்துக்காக என்னை இழுக்காதீங்க – பிரபல பாலிவுட் நடிகையை விளாசிய ரிஷப் பண்ட், என்ன நடந்தது?

RIshabh Pant Urvashi Rautela
- Advertisement -

இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் ஜாம்பவான் எம்எஸ் தோனி எனும் மகத்தானவரின் ஓய்வுக்குப் பின் 3 வகையான இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டு தொடர்ச்சியாக இடத்தை பிடித்து வரும் நம்பிக்கை நட்சத்திர விக்கெட் கீப்பராக உருவெடுத்துள்ளார். பார்ப்பதற்கு விளையாட்டுத்தனமாய் குறும்பு செய்வதற்கு ஏற்றார்போல் அதிரடியை காட்டும் இவர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இன்னும் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா போன்ற சவாலான வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற தோனியால் முடியாத சாதனையையும் அசால்டாக படைத்துள்ளார்.

தற்போது 24 வயதாகும் இவர் ஐபிஎல் தொடரிலும் டெல்லியின் கேப்டனாக செயல்பட்டு வருவதால் அடுத்த 10 வருடங்களில் இந்தியாவுக்கு விளையாடப்போகும் வருங்கால நட்சத்திரமாகவும் கேப்டனாகவும் பார்க்கப்படுகிறார். பொதுவாக அவரைப் போன்ற நட்சத்திர அந்தஸ்துடைய கிரிக்கெட் வீரர்கள் சினிமா நட்சத்திரங்களை போலவே பத்திரிகைகளிலும் சமூக வலைதளங்களிலும் கிசுகிசுக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். மேலும் கிரிக்கெட் வீரர்களாக இருப்பவர்கள் சினிமா நடிகைகளின் மீது காதல் கொள்வதும் அவர்களை திருமணம் செய்வதும் வழக்கமான ஒன்றாகும். எடுத்துக்காட்டாக இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார்.

- Advertisement -

காத்திருந்த பண்ட்:
அந்த வரிசையில் பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரௌடேலாவுக்கு ரிஷப் பண்ட் மிகப்பெரிய ரசிகர் என்றும் அவரை காதலிக்கிறார் என்றும் சமீப காலங்களில் சமூக வலை தளங்களிலும் செய்தித் தாள்களிலும் கிசுகிசுக்கள் வருகின்றன. இந்த நிலைமையில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தன்னை பார்ப்பதற்கு ரிஷப் பண்ட் பல மணி நேரங்கள் காத்திருந்ததாகவும் தம்மை பல முறை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்ததாகவும் நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளது ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. அவரின் பெயரை முழுமையாக சொல்லாமல் அவரது முதல் எழுத்துக்களை ஆங்கிலத்தில் சுருக்கி “ஆர்பி” என்று மட்டும் குறிப்பிட்ட ஊர்வசி இது பற்றி பாலிவுட் ஹங்காமா தொலைக்காட்சியில் கொடுத்த சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“ஒருமுறை வாரணாசியில் நான் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது புதுடில்லியில் எனக்கு ஒரு நிகழ்ச்சி இருந்ததால் அதை முடித்துவிட்டு உடனடியாக விமானத்தை பிடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதன்பின் புதுடில்லியில் நான் ஒருநாள் முழுக்க சூட்டிங்கில் இருந்தேன். சுமார் 10 மணி நேர படப்பிடிப்புக்குப் பிறகு நான் திரும்பிச் சென்றபோது தயாராக வேண்டியிருந்தது. ஏனெனில் பெண்கள் தயாராக நிறைய நேரம் எடுத்துக் கொள்வார்கள் என்பது உங்களுக்கு தெரியும். அப்போது மிஸ்டர் ஆர்பி அங்கே வந்து காத்திருந்து என்னை பார்க்க விரும்பினார். ஆனால் நான் சோர்வுடன் இருந்ததால் தூங்கிவிட்டேன். மேலும் அவர் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டதையும் நான் கவனிக்கவில்லை”

- Advertisement -

“அதன்பின் தூங்கி எழுந்தபோது 16 – 17 மிஸ்டுகால் இருந்ததைப் பார்த்து நான் மிகவும் பரிதாப்பட்டேன். அந்த நாளில் எனக்காக காத்திருந்த ஒருவரை நான் பார்க்காமல் விட்டுவிட்டேன். மரியாதை நிமித்தமாக நிறைய பெண்கள் யாரையாவது காத்திருக்க வைப்பதில் அக்கறை காட்டுவதில்லை. இருப்பினும் மரியாதை நிமித்தமாக நீங்கள் மும்பைக்கு வரும் போது சந்திப்போம் என்று அவரிடம் நான் சொன்னேன்” என்று கூறினார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவர் ரிஷப் பண்ட்டை தான் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார் என்பதை கண்டுபிடித்து அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்தனர்.

சீப் பப்ளிசிட்டி:
அது ரிஷப் பண்ட் பார்வைக்கும் சென்றதால் அதிருப்தியடைந்த அவர் சிலர் இதுபோல விளம்பரத்திற்காக பேசுவது வேடிக்கையாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஊர்வசியின் பெயரை குறிப்பிடாமல் பதிவிட்டிருந்தார். அவர் பதிவிட்டது பின்வருமாறு. “தலைப்புச் செய்திகளில் இடம் பெற வேண்டும் என்பதற்காக விளம்பரத்துக்காக சிலர் இப்படி பேட்டி கொடுப்பது வேடிக்கையாக இருக்கிறது.

- Advertisement -

அதிலும் சிலர் பெயருக்காகவும் புகழுக்காகவும் இந்த மாதிரி செயல்படுவது மிகவும் கவலைக்குரியதாகும். கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும்” என்று கூறியதுடன் ஆளை விடுங்கள் சிஸ்டர், உங்களின் பொய்க்கும் எல்லைகள் உள்ளது என்று ஹாஷ்டேக் சேர்த்து பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : ஆசியக்கோப்பை : இந்திய அணிக்கு எதிரான போட்டி குறித்து நக்கலான பதிலை அளித்த – பாபர் அசாம்

இதை பார்த்த ரசிகர்கள் ஊர்வசிக்கு தான் பதிலடி கொடுத்துள்ளார் என்பதை கண்டு பிடித்து அதையும் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்தனர். அதனால் இந்த செய்தி வைரலானதை தொடர்ந்து அந்த பதிவை தற்போது ரிஷப் பண்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து டெலிட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement