டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இந்திய வீரராக மெகா சாதனையை நிகழ்த்தி வரலாறு படைத்த – ரிஷப் பண்ட்

Pant
- Advertisement -

இந்தியா – இலங்கை அணிகள் மோதி வந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் வைட்வாஷ் வெற்றியுடன் இந்தியா வென்று அசத்தியது. கடந்த மார்ச் 4-ஆம் தேதி துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதை தொடர்ந்து கடந்த மார்ச் 12-ஆம் தேதி பெங்களூருவில் பகலிரவு போட்டியாக நடைபெற்ற 2வது போட்டியிலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கிய இந்தியா 238 ரன்கள் வித்யாசத்தில் மீண்டும் அபார வெற்றி பெற்று சொந்த மண்ணில் மீண்டும் ஒரு வைட்வாஷ் வெற்றியைப் ருசித்தது.

IND

- Advertisement -

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கு வந்த இலங்கை முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்ய முடியாமல் 3 – 0 என படுதோல்வியடைந்தது. அந்த நிலையில் நடந்த டெஸ்ட் தொடரிலும் ஒரு வெற்றியை கூட பெற முடியாத அந்த அணி ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது. இந்த தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை அசத்தினார். அதோடு இந்த டெஸ்ட் தொடருக்கான தொடர் நாயகன் விருதினையும் அவரே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூருவில் நடந்த 2-ஆவது போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் முதல் இன்னிங்சில் வெறும் 26 பந்துகளில் 7 பவுண்டரி உட்பட 39 ரன்கள் விளாசினார். அதன்பின் 2-வது இன்னிங்சில் களமிறங்கிய அவர் அதைவிட ஒருபடி மேலே சென்று சந்தித்த முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டார். பொதுவாகவே அதிரடியாக பேட்டிங் செய்ய கூடிய அவர் 2-வது இன்னிங்ஸ்சில் மிரட்டலான பேட்டியை வெளிப்படுத்தி வெறும் 31 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் அரைசதம் கடந்து 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Pant

குறிப்பாக வெறும் 28 பந்துகளில் அரை சதத்தை தொட்ட அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரை சதம் அடித்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் கபில்தேவ் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார். கடந்த 1982-ஆம் ஆண்டு கராச்சி நகரில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் 40 பந்துகளில் அரைசதம் அடித்த ஜாம்பவான் கபில்தேவ் இதுநாள் வரை அந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார். தற்போது அதை 30 ஆண்டுகளுக்கு பின் ரிஷப் பண்ட் உடைத்துள்ளார்.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற ஜாம்பவான் எம்எஸ் தோனியின் சாதனையையும் அவர் தூள் தூளாக நொறுக்கினார். இதற்கு முன் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திரம் எம்எஸ் தோனி 34 பந்துகளில் அதிவேகமாக அரை சதம் அடித்து சாதனை படைத்திருந்தார். தற்போது அதையும் விட்டு வைக்காத ரிஷப் பண்ட் 28 பந்துகளில் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

Pant

மேலும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த ஒரு இந்திய வீரரும் படைக்காத சாதனையை முதல் நபராக படைத்து ரிஷப் பன்ட் அசத்தியுள்ளார். அந்த சாதனை யாதெனில் ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 150+ ஸ்ட்ரைக் ரேட் வைத்து 30 ரன்களுக்கு மேல் குவித்த வீரராக ரிஷப் பண்ட் தனது பெயரை வரலாற்றில் இடம்பெறச் செய்துள்ளார்.

இதையும் படிங்க : அடப்பாவமே சூரியகுமார் யாதவுக்கும் அதே பிராபலமா? சிக்கலில் மும்பை அணி – என்ன பண்ண போறாங்களோ?

பெங்களூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்சில் 26 பந்துகளை சந்தித்து அவர் 150 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 39 ரன்கள் குவித்தார். அதேபோன்று இரண்டாவது இன்னிங்சில் 31 பந்தை சந்தித்த அவர் 161.29 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 50 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஒரு டெஸ்டின் இரு இன்னிங்ஸ்களிலும் 150+ ஸ்ட்ரைக் ரேட் வைத்து 30 ரன்களுக்கு மேல் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement