எஞ்சியுள்ள ஐ.பி.எல் தொடரில் இவரே கேப்டனாக செயல்படுவார் – டெல்லி நிர்வாகம் எடுத்த முடிவு

Iyer
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி 14 ஆவது ஐபிஎல் தொடரானது துவங்கியது. இத்தொடரின் முதற்கட்ட போட்டிகளில் 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட போட்டிகள் துவங்கிய போது வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக இந்த தொடரானது பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மீதமுள்ள 31 போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளுக்கு டெல்லி அணியின் கேப்டனாக யார் செயல்படுவார்கள் ? என்று கேள்வி சமூக வலைத்தளத்தில் அதிக அளவில் எழுந்தன. ஏனெனில் இங்கிலாந்து அணி இந்தியா வந்திருந்த போது அந்த தொடரில் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் காயமடைந்தார்.

இதனால் ஐயர் இந்த ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. அதன் காரணமாக இளம் வீரரான ரிஷப் பண்ட் டெல்லி அணியை கேப்டனாக வழிநடத்தினார். அவரது தலைமையில் 8 போட்டிகளில் விளையாடிய டெல்லி அணி 6 வெற்றிகளைப் பெற்று இந்த தொடரில் முதலிடத்தில் நீடிக்கிறது.

iyer

இந்நிலையில் தற்போது காயத்திலிருந்து குணமடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பி உள்ளதால் ரிஷப் பண்ட் அல்லது ஐயர் ஆகிய இருவரில் யார் எஞ்சியுள்ள ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்படுவார்கள் ? என்ற கேள்வி இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலும் ரிஷப் பண்ட் தான் கேப்டனாக தொடர்வார் என்று டெல்லி அணி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Iyer-1

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் நிச்சயம் பண்ட் தான் இந்தத் தொடரிலும் கேப்டனாக செயல்படுவார் என்று உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இந்த தொடரை டெல்லி அணி சிறப்பாக துவங்கியுள்ளதால் கேப்டன் மாற்றம் இப்போது அவசியம் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement