ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் இரண்டாம் தேதி துவங்குகிறது. அதற்கு தயாராவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஜூன் ஒன்றாம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு வித்தியாச முயற்சியாக துவக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 1 (6) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடினார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
அசத்திய பண்ட், பாண்டியா:
அந்த வகையில் இரண்டாவது விக்கெட்டுக்கு 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் ரோகித் சர்மா 23 (19) ரன்னில் ஆட்டமிழந்தார். அந்த நிலையில் வந்தால் சூரியகுமார் யாதவ் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடினார். அவருடன் சேர்ந்து மறுபுறம் அசத்தலாக விளையாடிய ரிஷப் பண்ட் 4 பவுண்டரி 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு அரை சதமடித்து 53 (32) குவித்து ரிட்டயர்ட் அவுட்டாகி சென்றார்.
ஆனால் அடுத்ததாக வந்த சிவம் துபே தடுமாற்றமாக விளையாடி 14 (16) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். குறிப்பாக சமீபத்திய ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்ட போட்டிகளில் தடுமாறி சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்த அவர் இந்த போட்டியில் சுமாராக விளையாடி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் சூரியகுமார் யாதவ் 4 பவுண்டரியுடன் 31 (18) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்ததாக வந்த ஹர்திக் பாண்டியா 17வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்டு தனது ஆட்டத்தை அற்புதமாக துவங்கினார். அந்த வகையில் தொடர்ந்து அசத்திய அவர் 2 பவுண்டரி 4 சிக்ஸருடன் 40 ரன்கள் அடித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார்.
இருப்பினும் ஜடேஜா 4* (6) ரன்கள் மட்டுமே எடுத்தார். அதனால் 20 ஓவரில் இந்தியா 182/5 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மெஹதி ஹசன், சோரிஃபுல் இஸ்லாம், முகமதுல்லா, தன்வீர் இஸ்லாம் தலா 1 விக்கெட் எடுத்தனர். முன்னதாக இந்த உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பராக விளையாடப் போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்பட்டது.
இதையும் படிங்க: சச்சின், தோனி, கோலி கூட செய்யாத சாதனையை விடீயோவின் மூலம் நிகழ்த்தி காட்டிய – தினேஷ் கார்த்திக்
அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் சஞ்சு சாம்சன் ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனால் ரிஷப் பண்ட் அற்புதமாக விளையாடியதால் அவருக்கே முதன்மைப் போட்டியின் பிளேயிங் லெவனில் விக்கெட் கீப்பராக வாய்ப்பு கிடைப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது. அதே போல சுமாரான ஃபார்மில் தவிர்த்த பாண்டியாவும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி தன்னுடைய தரத்தை காண்பித்துள்ளார்.