ரோஹித் பாய் எனக்கு அடுத்த 2 வருஷம் டைம் குடுத்திருக்காரு.. அதுபோதும் எனக்கு – ரிங்கு சிங் வெளிப்படை

Rinku
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறும் இந்த மாபெரும் டி20 உலக கோப்பை தொடரில் உலகெங்கிலும் இருந்து 20 அணிகள் பங்கேற்று போட்டியிட இருக்கின்றனர். இதன்காரணமாக இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டிற்கு பின்னர் இதுவரை இந்திய அணி டி20 உலக கோப்பையை கைப்பற்றியதில்லை என்பதன் காரணமாக இம்முறை எப்படியாவது டி20 உலக கோப்பை தொடரை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியே ஆக வேண்டும் என்று முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது.

- Advertisement -

அதற்காக 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு நியூயார்க் சென்றடைந்த வேளையில் இந்த தொடருக்கான இந்திய முதன்மை அணியில் இடம் பெறாத ரிங்கு சிங் பேக்கப் வீரராக தேர்வு செய்யப்பட்டு அமெரிக்கா புறப்பட இருக்கிறார்.

இந்நிலையில் முதன்மை இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து பேசியுள்ள ரிங்கு சிங் கூறுகையில் : நல்ல செயல் திறனோடு இருந்து அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்றால் யாருக்குமே வருத்தமாக தான் இருக்கும். ஆனாலும் அணியின் காம்பினேஷனை கருதி தான் என்னை முதன்மை அணியில் எடுக்காமல் பேக்கப் வீரராக வைத்திருக்கிறார்கள்.

- Advertisement -

எனவே அது எனக்கு போதுமானது. நம் கையில் இல்லாத விஷயங்கள் குறித்து நாம் எப்போதும் கவலைப்பட கூடாது. ரோகித் பாய் என்னிடம் பெரிதாக அட்வைஸ் கொடுக்கவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இன்னொரு டி20 வேர்ல்டு கப் இருக்கிறது. எனவே அதை நோக்கி கடுமையாக உழைத்து தயாராகும் படி கூறினார்.

இதையும் படிங்க : நீங்க வேணா பாருங்க.. டி20 உலகக்கோப்பையில் நிச்சயமா அவரு தாக்கத்தை ஏற்படுத்துவார் – ரிக்கி பாண்டிங் கருத்து

அவர் எவ்வளவு சிறந்த கேப்டன் என்பது உலகம் பார்த்திருக்கிறது. அவருடன் நான் ஒரே அணியில் இருப்பதை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இளம் வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றுதான் ரோகித் சர்மா எங்களிடம் கூறுவார் என ரிங்கு சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement